வண்டு துளைக்கா மூங்கிலில் காற்று நுழைந்து கவிதையானதோ..
கவிதையாய் மாறிய காற்று காதினில் நுழையும் போது, ஒலியாகவோ அல்லது மனமறியும் சொல்லாகவோ மெய்சிலிர்க்க வைக்கிறதோ....
காற்றுக் கவிதையின் ஒவ்வொரு அணுவும் என் காதினில் நுழைந்து நெஞ்சைக் கவர்ந்தனவே...
கரை தொடும் அலையின் ஓசையும்
தரை தொடும் மழலையின் நடையும் காற்றில் எங்கும் சேர்ந்தனவே..
தட்டித் தட்டி சேர்க்கும் தோளின் தாளம் கூட கருவினில் பிறக்கும் ஓசையானதே...
எட்டுதித்திக்கும் பறந்திருக்கும் வானம் சூழ் மேகம் போல, இடியோ, மழையோ, புயலோ, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் கரையும் ஒரு துளி பனித்துளி போல் ஒவ்வொரு மொட்டிலிருந்தும் அணுவிலிருந்தும் இசை தோன்றியதுவே.
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் இயற்கையாய் கவர்ந்த என்னை இசையே...
கருவினில் தொடங்கி கல்லறை தொடும் இடைப்பட்ட காலங்களில் அழுகையும், சிந்தனையும், சிதறலும், சந்தோசம், சோகம், துக்கம், துயரம் என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒவ்வொரு நிறமாக என்னோடு பயணம் செய்கிறாய் நீ..... இசையான இன்னுயிரே..
[/b]