Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Ashwin_

Pages: [1]
1
மழை நீரும் ஊற்றாய் ஓட..
எண்ணமெல்லாம் எண்ணியதோ
சிறு வயதில் விட்ட காகித கப்பலை.

வறண்ட பூமியை நீர்நிலையாய்
மாற்றினாய்..
உன்னால் இன்று சிரிக்கிறான்
விவசாயி..
உனக்காக காத்திருந்த நெற்பயிரும்
நன்றிகள் சொல்லுதே.

மேக வெடிப்பில் பூமிக்கு வந்தாய்..
சூட்டை தனித்தாய்..
ஏனோ ஏழையின் வீட்டையும்
இடித்தாய்.

கோபம் கொண்டால் வெள்ளம் ஆகிறாய்..
கர்வம் கொண்ட மனிதனை கொஞ்சம்
கெஞ்சவும் வைக்கிறாய்.

வெள்ளத்திலும் பஞ்சத்திலும் மனிதன்
மறந்த மனிதத்தை நினைவூட்டி
செல்கிறது மழை.

மண் மீது உள்ள காதலால்
மறந்து சாய்கிறாய்..
உச்சி முதல் பாதம் வரை
எனை உரசிப் பார்க்கிறாய்..
தூர நின்று நான் பார்த்தால்
குளிர் காற்றை வீசுகிறாய்.!

வண்ண வண்ண நிறம் பூசி
வானவிலாய் மிளிர்கிறாய்..
உலகத்திற்கு உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்.

மஞ்சள் நிற வெயில் கூட
உனை பார்த்து கரைகிறது..
உன் மீதுள்ள பயத்தால் தான்
சூரியனும் மறைகிறது.

வானம் மனம் குளிர்ந்து தன் உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும் “மழை”.

முதல் மழையில் சில்லென
மாறியது சூழல்..
சில மணித்துளிகள் பெய்த மழையில்
வெயிலின் வியர்வை துளிகள்.

மழைத் துளிகளாய் முதல் மழையோடு
முடிந்து போவதில்லை வானிலை..
அடுத்தடுத்து பெய்யும் மழை.! Endrum anbudan malini teacher 🫂🥰

3
நிலா
என் வாழ்வின் பக்கங்களில் அழிக்க முடியாத ஒரு பெயர் - நிலா

குழந்தைப் பருவத்தில்...

அன்னை மடியில்
அழுத நிலையில்
கண்கள் கதறி
கன்னங்கள் சிவந்து
உண்ண மறுத்து
உணவை வெறுத்து
நான் செய்த நாடகங்கள்

உன்னைக் காட்டி
எந்தன் பாட்டி
நிலாச்சோறு ஊட்டி
தோள்மீது சாய்த்து
நித்திரையில் ஆழ்த்திய
அவ்வினிய நினைவுகள்

இளமைப் பருவத்தில்...

புத்தகம் ஏந்தி
பள்ளி புதுந்து
குறும்புகள் குறைந்து
குணங்கள் மாறி
நட்புகள் தோன்றி
வண்ணங்கள் பூட்டி
வாழ்க்கையின் கோணங்கள் மாறிய நாட்கள்

உன் ஒளியிலே பயின்று
உன்னுறவிலே மகிழ்ந்து
உன் தரிசனம் வேண்டி
காத்திருந்த தருணங்கள்

மங்கையாய் நான் மாறி
என் நளினங்களது கூடி
ஒவ்வோர் திங்களும்
வளர்ந்து, தேய்ந்து
நிலவாய் மெருகேறி
தோழியாய் உனை பாவித்து
உன்னோடு பகிர்ந்த கதைகள்
என் நெஞ்சில் இனிக்குதடி

காதல் பருவத்தில்...

"நெஞ்சணையில் அவன் இருக்க
பஞ்சணையில் இவள் உடலிருக்க
துயிலோ துன்பத்திலிருக்க
உயிரோ ஊஞ்சல் ஆடுதடி "
என காதலால் கவிதை எழுதி
உன்னுடன் வாசித்த கணங்கள்

"உனது வெளிச்சத்தில்
தலைவன் நெருக்கத்தில்
நாணம் என் அகத்தில்
மனமோ விண்ணகத்தில்
உலகம் கைவசத்தில்"
என்று உலவிய காலங்கள்

முதுமைப் பருவத்தில்...

மொட்டைமாடி மேலே
உன்னொளியின் கீழே
தலைவனின் மார்மீது
பல்போன பின்னாலும்
பழங்கால கதைபேசி
நரைகூடிப் போனாலும்
மனதாலே மழலையாய்
நானாகி போகின்றேன்

சந்ததிகள் கோடி கண்டும்
இளமை மாறா வடிவம் நீ
குழந்தைக்குப் பதுமைநீ
மங்கைக்குத் தோழி நீ
ஆணுக்குக் காதலி நீ
முதுமையில் தாயும் நீ
என்றும் அழியா ஞாபகம் நீ!!                                              டெடிகேட் டு நிலா மாறி இருக்கும் என்றும் என் மணத்தில் வாழும் பிரியங்கா டீச்சர் ❣💞

4
Hi frnds I'm wtc appavi paiyan Ashwin... Enaku prasanth romba pudikum so avaru movie la enaku romba romba pudicha oru song tha dedicate panna poren..movie name ,parthen rasithen: song :enakkenna erkanavey piranthaval evolo (Enaku romba pudicha sila varigal) Maarbukku thiraiyittu maraikkum pennae
Manasaiyum maraikkaadhae
En vayadhaiyum vadhaikkaadhae
Pul veli kooda pani thuli ennum vaarthai pesumadi
En punnagai rani oru mozhi sonnaal kaadhalum vaazhumadi

 : Vaarthai ennai kai vidum bodhu
Mounam pesugiren en kanneer pesugiren
{ Ellaa mozhikkum kanneer puriyum
Unakken puriyavillaii… } dedicate to wtc angel rojaa nd kanmani 🙈💞🙉

5
மயங்கினேன் உன் வார்த்தையில் காதலிக்கவில்லை ! இன்பம்   கொடுத்தாய்   என் தமிழால்
செவிகள் இனிக்கும்படி ! மனதை திருட எத்தனித்தாய்   நீ லவ் திருடன் என்று உரைத்து கொண்டே !                        களவு போக துணை வந்தாள் என்னவள் தொலைத்தேன் என் ஹிருதயத்தை !                    என் ஏக்கம் தெரிந்து என்னை
வீழ்த்தினாய் உன் வார்த்தையால்.                 களவு பேச்சுக்கள் கால நேரம்
கடந்து நம்மை கலந்துரையாட தூண்ட ! பேசிய வார்த்தையில் எல்லாம் தமிழ் ததும்ப காதல் கசிந்துருகி உன்னை விட உன் தமிழை அதிகம் நேசித்தேன் !                தமிழாய் என்னுள் நுழைந்து குருதியில்  கலந்து இன்று தமிழில் வார்த்தைகள் தீர்ந்து போனதாய் என்னை உணரவும் செய்துவிட்டாய் உன் மௌனத்தால் !     இன்று உன்னிடம் தூது செல்ல என் தமிழை தவிர என்னவள் கூட இல்லை என்னிடம் !                 உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் ! ஆனால் அங்கு தான் உணர்ந்தேன் நான் என்னை ரசிக்கவில்லை உன் வார்த்தைகளை தான் ரசிக்கிறேன் என்று உன் காதல் கடலில் கலந்து மூழ்கி உன்னுள் இணைந்து விட்டேன் உன்னில் இருந்து என்னை பிரித்து செல்ல யாராலும் இயலாது ஆழி பேரலையாக அடித்து செல்லும் உன் காதல் என்னுள்.. உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் ஆனால் அங்கு தான் உணர்ந்தேன் நான் என்னை ரசிக்கவில்லை உன் வார்த்தைகளை தான் ரசிக்கிறேன் என்று உன் காதல் கடலில் கலந்து மூழ்கி உன்னுள் இணைந்து விட்டேன் உன்னில் இருந்து என்னை பிரித்து செல்ல யாராலும் இயலாது ஆழி பேரலையாக அடித்து செல்லும் உன் காதல் என்னுள்

Pages: [1]