Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Aadhira

Pages: [1] 2
1
Hi all hope u guys doing good....

Happy birthday A. R. Rahman Sir🩷🫰


Nenga elarukum periya inspiration 90s 2k nu parapatchame ilama elaraiume unga isai la katti potu than vechu irukinga. but ungalita iruka humbleness romba viyakaveikum ela pugalum iraivanuku than nu soli vangina Oscar🏆 award ipoum niyabagathula iruku. And family nu patha avlo cute ana love ❤ ipdi nala family irukanala than ivlo azhagana isai eh unglala kuduka muditho enavo sir..
Ungloda isai payanam menmelum valaranum achieve pante irupinga sir... 
Nan request panakoodiya song " NewYork nagari urangum neram" From sillunu oru kadha intha song la avlo nunukangal irukum miss panitu irukangavangala nenachi intha song keta kanner thana varum avlo powerful 🫰
Ungaluku wish pana chance kudutha sigaram thotta samarpanam nizhagchiku nandri 😇
Once again wish u many more happy birthday sir 😍😍😍

2
தனிமையிலே தொலைந்து..
உதிரமில்லா இதயத்தின் புலம்பல் கேட்கிறதா....
விண்ணோடும் இல்லாமல் மண்ணோடும் இல்லாமல்...
வழி நடுவில் வலியாய்...
யாரிடமோ பயணம் சொல்ல மறந்தது போல்
அங்கும் இங்குமாய் சிறகடிக்கிறது....

ஒஹ் மனிதா...
என்னை தள்ளி போகாதே....
உடல் விட்டு உயிர் ஓடிவிட்டது...
இப்போது உடலும் இல்லை..உயிரும் இல்லை..
தனிமை வாட்டுகிறது....

உடல் அடக்கமானதும்
குடும்பமே என்னை விட்டு பிரிந்து விட்டது ..
உள்ளம் நினைத்து உறவை தேடி போனால்....
என்னை பார்த்தவுடன் நடுக்கதில் ஓடகின்றனர்.....

உறவே நான் என்ன பிழை செய்தேன்...
உறவை தேடி நான் வந்தது அது  என் தவறா?...
அல்லது என்னை மறந்து பிரிந்தது உங்கள் தவறா?...
 பகலிலே என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை....
 இரவிலே என்னால் நடமாடமல் இருக்க முடியவில்லை....

இரவு என்னை நிம்மதியாய் உறங்க விடாமல்....
நினைவுகளால் அலைய விடுகிறது...
தொலைத்த என் உறவை தேடி
கால் இல்லாமல் காற்றோடு மிதந்து வருகின்றேன்....

உறவோடு இருக்கும் போது
சென்ற இடமெல்லாம் தலை கோதி
போய் வா மகளே என்று சொல்லி அனுப்பும் உங்கள் வார்த்தை...
இப்போதும் என் காதில் ஒளித்து க்கொண்டு தான் இருக்கின்றது....
 
கடைசி நிமிடத்தில் ஏன் கூற மறந்தீரோ
 போய் வா என்று...
விடை தெரியாமல் அலைந்தோடி
வருகின்றேன் தெருவோரம்....
விடை கிடைக்காமல் செல்லவும் மாட்டேன் என் நிரந்தர இல்லத்திற்கு.....

வெளிச்சத்தை தொலைத்து இருளுக்குள் அடங்கி விட்டேன்...
என் நிறைவேறாத ஆசையால் நினைவுகளை தேடுகின்றேன்....
வா என்னிடம்... போய் வா என்று சொல்ல மறந்தாயோ...
உறக்கமில்லதா என் இரவுகளுக்குள்...
இரக்கமில்லாமல் என்னை தொலைத்து விட்டாயே ....

 நினைவோடு நான் இருக்கும் வரை
இரவோடு கலந்த என் பயணம் தொடரும்....
இப்படிக்கு நான் தான் உங்கள் பக்கத்தில் இருக்கும் ....
ஹாஹா ஹா ஹா சட்டென்று திரும்பி பார்க்காதே
நடுக்கத்தில் உறைந்து விடுவாய்....🙄

3
Hi RJ sis ...
Hope u guys doing good 🩷

This time nan kekka pora song " Thangame una thalata nan iruken from kodiveeran" ... This song nan ketathu Ila pona week kavithai program apo Anna intha song potu irunthanha apo than keten romba touching ah irunthuchu... So intha song nenglum elam kekanumnu virupapadren..

Fav lines

பத்து மாதம்
வாழும் வரையில்
உன்ன தாயின் மடியில்
சுமந்தாள் இந்த மண்ணில்
வாழும் வரையில் எந்தன்
நெஞ்சில் நானும் சுமப்பேன்.

தோப்புள் கொடி
மீதிலே வந்தா மறுத்தாயடி
உந்தன் நிழல்தானே எல்லை
என்பேன் என் உயிர் தனியாக
இல்லை என்பேன்

This song dedicated to my🩷🩷🩷 Anna MAARI 🩷🩷🩷
love u so much Anna and I wish epoum intha bandham thodaranum life long...
Thank u all

Anbudan ungal Aadhira 🩵

4
Hi all ...
 Happy birthday rajini sir 🩷🩷🩷

Tamil cinima la super star nu sonale apoum ipoum yen epoum athu nama thalaviar than ini oru super star nu oruthara industry la sonalum athu next super star nu than solvanga ilaya..
Avoroda style lam pidikum apo la irunthu ipo varaikum marama iruku avaroda kadavul nambikai pidikum and thalavair ta romba pidichathu oruthan ku oruthi than evlo problems vanthalum nama kalacharam athanu vazhra manushan Inspiring characters ithelam.

Nan request pana koodiya song maranam massu maranam song from petta intha song la ranini semma mass ah iruparu lines amazing ah irukum...
Happy ah kelunga enjoy panunga once again happy birthday thalaiva 🩷🩷🩷

5
Hi sis ma 🩷

This time nan keka pora song " Thillu mullu pannala song from gethu movie " Actually pathingna ethuku intha song enaku pidikumey therla but keta nala irukum fast beat nama harish music la adi dhool ah panirukarula so nenglaum ketu enjoy panunga makkale....

Fav lines
உன்னப் பாத்த ஜோருல

என் அப்பேன் பேச்சும் ஏறல

நேருல பேச தில் இல்ல

என் கூட பேசு செல்லுல

நீதான் எப்பவும் நெஞ்சுல

இத யாருக்கிட்டயும் சொல்லல

எனக்கு நீதான் அஞ்சல

நான் இதுக்கு மேல கெஞ்சல

Dedicated to all vibe lovers nama epoum vibe thane so enjoy the vibe makkas 

Thank u ❤

                  Anbudan ungal Aadhira


6
நம்மை பெற்ற தாயின் வயிற்றிலிருந்து
வந்தால் தானோ சகோதரத்துவ
பாசம் பொங்கும் ?

எத்தனை நாட்கள் பாசம் வைக்க நேசம்
வைக்க ஒரு சகோதரன் இல்லை என்ற ஏக்கம்
சுழன்றுகொண்டிருந்தது என் மனதில்

ஏதோ ஓர் தாயின் வயிற்றில் பிறந்து
ஏதோ ஒரு நாட்டில் வளர்ந்து Wtc என்னும் அரட்டை அரங்கத்தில்
இணைந்து

பரஸ்பரம் பேசி பேசியதில் பேரை கூட பரிமாறிக் கொள்ளாமல் உள்ளுணர்வுடன் ஐக்கியமாகி அண்ணா என்று அழைக்கையில்

உச்சி முதல் பாதம்  வரை பாச உணர்வு பிரவாகம் எடுத்து ஓடிடுமெனில் நீயும் என்
சகோதரனே.. அப்படி கிடைத்த பொக்கிஷம் தான் என் அண்ணா மாரி

தினம் தினம் பேசிக்கொள்வதில்லை எங்கு இருக்கிறீர் என நான் அறியவில்லை
இருந்தும் உன்  நினைவுகள்
வந்து வந்து செல்லும்

என்றும் அண்ணண் என நினைக்கையில்
உனக்காய் ஓர் இடம் என்றும் என் மனதில்
உண்டு

என்றும் அன்புடன் உனது தங்கையாக


7
Hi sisy ma
 Intha time nan keka pora song en favorite than adikadi keka thonura paatu actually this song sad mode than ana nama makkal itha vibe song ah mathi vechu irukanga athanalathano enavo enaku intha song pidichu pochu ena song na "Thenmozhi vanmathi song from Thiruchitrambalam"

Fav lines actually song la ela lines um fav than la memory pandra alavuku iruka koodiya song ithu so enjoy panunga sad song eh um vibe ah maathi kekum sangathil nanum oruval nenglum kelunga

Thank u friends




8
பெண்ணின் நாணம்.....

விந்தையிலும் விந்தையடி,
விசித்திரமான விந்தையடி,
விலை கொண்டு வாங்க இயலுமா?
பெண் நாணம் , விலை மதிப்பில்லா சொத்துமடி......

பெண்ணின் அடையாளம் வெட்கமடி,
பருவம் முதல் முதுமை வரை
தொடரும் இது ஒரு அற்புதமடி...

விரல் கொண்டு முகம் மறைத்தால்
அதில் வெட்கத்தின் அழகு
மெய்சிலிர்க்க தூண்டுதடி......

பெண்ணே, நீ கொள்ளும் நாணம்
விரும்பியவரின் கண்ணுக்கு விருப்பமடி....
விண் நிலவும் அதை கண்டு
பொறமை கொள்ளுதடி.......

காதல் தளிர்த்தால்,
அங்கையும் நிலவுதடி,
மன்னன் முகம் கண்ட நொடி,
மங்கையின் மனதில்,
சட்டென்று நாணம் ததும்பி பாய்கிறதடி.....

பெண்ணே உன் நாணத்தில்
நாணலும் சாய்கிறதடி,
அதை கண்டு,
அவன் என்கிற கர்வமும் தொலைகிறதடி...

9
Hi RJ sisy
Intha song enoda recent playlist la repeat mode la pora song aiduchu nama vibe song ah vey ketu palagiyachu but intha song keka nalaruku...
Ena song nu kekuringla Rayil-in oligal unaiyae theduthae from blue Star movie

Fav lines

உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே

Dedicated to all Melody lovers

10
அழுது கரைத்த மனத்தீவின்
பாதை மணலனைத்தும்
திட்டுகளாகிக் கீறிக்
கிழிக்கத் தொடங்கி விட்டது.
ஒவ்வொரு திட்டுகளின்
இடைவெளியிலும் ஓராயிரம்
தீப்பந்தங்கள் எரிகின்றன.

சுட்டெரிந்த தசை நார்களைக்
குருதியில் புரட்டி, நாவு வடியத்
திண்பதில் தான் உனக்கு
அத்துனை ஆனந்தம்..!!
நீ எப்போதுமே படர்ந்து
கிடந்த கனவுத் திடல்
பெரும்பள்ளமாகிப் போனது..!!

அன்பும், பரிவும், நேசங்களும்
நிறைவாகியிருந்தப் படலத்தில்
வெந்தனலையும்,
செங்குருதியயையும் நிறைத்த
கொடூரம் உன்னையேச் சாரும்.
உன்னிடமிருந்த அனைத்திற்கும்
கேடானவைகள் அனைத்தும்
என்னிடம் கொட்டப்பட்டு விட்டது.

என்னைக் காட்டிலும் உருகிக்
கருகித் துயிலாதுப் படியாதுக்
காதலிக்க இன்னொருவளை
எந்தத் தாயாலும் பிரசவித்து விட
முடியாது.

வான் ஒப்பாத என் ஒட்டு
மொத்தப் பேரன்பையும்
திணித்து வைத்த நீ தாங்காது
தாள வீழத் தயாராகியுள்ளாய்.

எனக்காய் நீயும், நீயாய்
நானுமே வாழ்ந்திடாமல்
அத்தனைத் தொகைக்
காதலையும் காகிதப்
பூவாய் கசக்கி எறிந்து
விட்டிருக்கிறாய். ஆனால்,
அடிமையான மனதேனோ
தன் ஆதியையேத் தேடித்
திரிந்து ஏமாந்து விடுகிறது.

11
Hi RJ sisy

Enoda favorite vibe song athavadhu vibe ku mey eluthi music pota song nu kooda sollaam. Apdi oru song than request pana poren...

Jumbalaka jumbalaka jumbala jumbale song

Ithu avlo semma vibe song  epo ketalum vibe agi refresh aiduvom

Fav lines

உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே

So yan pentra inbam ivaiyulagam nu solavanagala so nengalim enjoy panunga intha song ketu
Dedicated to all wtc tamizhini chat friends 


12
மற்றவர்கள் மனதுக்குள் நுழைய
முயல்பவனே
உன் மனதுக்குள் நுழைய நீ
முயன்றதுண்டோ

முயன்றிருந்தால்...
உன் மனம்
அசிங்கங்களின் குப்பைக்கூடையாய்
இருப்பதனை அறிந்திருப்பாய்
உன் மனம்
உன் ரகசிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்திருக்கும்
அந்தரங்க அறை என்பதனை
நீ அறிந்திருப்பாய்

உன் மனம்
ஒரு பாற்கடல்
அதை கடைந்தால் அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதனை
நீ அறிவாயா

உன் மனம் ஒரு பருந்து
அது மேலே பறந்து கொண்டிருந்தாலும்
கீழே செத்துக்கிடக்கும்
எலிகளை தேடுகிறது அல்லவா

உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கரமான அதன் ஆழம்
உனக்கே தெரியாதல்லவா
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனதில் தான் இருக்கிறது
அதை யாருக்காவது தெரிவிக்கும்
தைரியம் உனக்கு உண்டா

சமூகம் என்பது ஒரு
முகமூடி நடன அரங்கம்
நாம் அனைவரும்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக் கொண்டிருக்கிறோம்

13
வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே பல பாடங்களை
கற்றுத் தருமனால்.. நான்
என் வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ
விரும்புகின்றேன்.

தனிமையில் எனக்கு
இனிமை இல்லை என்றாலும்..
அதில் துன்பங்கள் இல்லை
என்பதை உணர்த்த
மறுப்பதில்லை தனிமை..!

தனிமை மிகவும்
வித்தியாசமானது நாமே
அதை எடுத்துக் கொண்டால்
ரொம்ப இனிமையாக
இருக்கும்… தனிமையை
மற்றவர்கள் நமக்கு
கொடுத்தால் அது கசக்கும்.!

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை.!

பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம் அங்கு
என்னை காயப்படுத்த
யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல்
நமக்கு பிடித்தவர்களை
தனிமையில்
நினைத்துக்கொண்டு இருப்பதும்
ஒரு தனி சுகம் தான்.

இன்று நானும்
தனிமையில்.. நான்
காட்டிய அன்பும்
தனிமையில்.. என்
வாழ்வும் தனிமையில்..!

தனிமை என்பது நான்
தேடிக்கொண்ட சாபம்
அல்ல நான் என்
உயிருக்கும் மேலாக
நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு.

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்து கொண்டேன்..
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகிக் கொண்டேன்.

போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட.. தனிமை
ஒன்றும் கொடூரமானது
இல்லை.

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை.

தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம்..
ஏமாற்றிச் செல்லும்
உறவுகளை விட
தனிமையே நம்முடன்
பலகாலம் வாழ்கின்றது.

பல கஷ்டங்களை கண்டு
மரத்துப் போன என்
இதயத்திற்கு தனிமையே
போதுமானதாக இருக்கின்றது.

14
Hi RJ sis

I need a song Kadhalikathe manase kadhalikathe from imaika nodigal
Dedicated to all love failures atleast oru love achum failure la irukama irukathula ovoru person kum athuku intha song dedication

Lines காதலிகாதே
மனசே காதலிக்காதே
காதலிச்சி கடைசியில
கையில தோங்காதே

15
என் வாழ்வின் முதல் காதல் அப்பா
என் பாதங்கள் பூமியில் பதியும் முன்
நெஞ்சில் வாங்கி கொண்டாயே, அப்பா.
வாய் திறந்து பேசிய மழலை மொழியை
செவி வழி கேட்டறிந்து இன்புற்றாயே, அப்பா.

தவழ்ந்து வளரும் பருவத்தை
அருகில் இருந்து பாராமல்
எனக்காக ஓடிச் சென்று உழைத்தாயே, அப்பா.
பள்ளியில் நான் பெற்ற அடி, உனக்கும் வலித்ததோ..
என் மகளை காயப்படுத்தும் ஆசிரியரின் கண்டிப்பும்
தவறு தான் என்றாயே, அப்பா...

இரவு பயணங்களில், கண் உறங்கியதில்
கண் விழித்து பார்த்தேன் படுக்கை அறையில்...
பருவ பெண்ணாக வளர்ந்தாலும், நீ என்னை குழந்தைப்
போல் கையில் ஏந்தி சென்ற நாட்கள் எத்தனையோ...

கல்யாணம் என்ற பேச்சு வார்த்தை,
ஏன் உன் முகத்தில் இவ்வளவு வேதனை,
உன்னை விட்டு பிரியும் நிலை
வாழ்வில் என்றுமே எனக்கு வராது... அப்பா
இது ஒரு தந்தைக்கு மகள் செய்து கொடுக்கும் சத்தியம்.

வாழ்க்கை என்ற ஓட்ட பந்தையத்தில் நானும் உன்னோடு சேர்ந்து ஓடுகிறேன்...
விழுந்தாலும், கை கொடுத்து தூக்கி விடுகிறாயே அப்பா.
இதுதான் வாழ்க்கை, நில்லாமல் ஓடு என்று நம்பிக்கை கொடுக்கும் உன் குரல்.. எனக்கு பல மடங்கு உத்வேகம்.

பல சுமைகள் தாங்கி விண்ணில் பறந்தாயே..
எனக்கு நிழலும் தந்தாயே...
இப்பொழுது உன்னுடன் நானும் சேர்ந்தே பறக்கிறேன்..
உன் சுமைகளை பகிர்ந்துக் கொள்ள.
என் கை பிடித்துக்கொள், வா என்னுடன்
உனக்கும் நான் சிறந்த தந்தை ஆகிற வரம் கொடு ... அப்பா !

Pages: [1] 2