காத்திருப்பு...!
உனக்காய் காத்திருந்து நிலவுகூட
பகலில் வந்து விட்டது பகல் நிலவாய்
இன்னும் நீதான் வரவில்லை
காக்க வைப்பதில் உனக்கு
அவ்வளவு சுகமா அதைவிட
சுகம் உனக்காய் காத்திருப்பதில்
உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதைகூட உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது
உனக்காய் காத்திருந்து இறந்துபோக
ஆசைதான் உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்
உனக்காய் காத்திருந்து நான்
வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது
நீ தாமதமாய் வரும்வரை எப்படி
சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது....