Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 18💥  (Read 215 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 18💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் TCC Team..!

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
என் தாயின் கருவறையில் இருந்தே என்னை பிடித்துக் கொண்டாய்

உன்னை விட்டு விலக இந்த பூமியை அடைந்தேன்
ஆனால் அப்போதும் என்னால் சொல்ல முடியவில்லை உன்னால் எனக்கு தொல்லை என்று

ஒரு வழியாக நான் பேச ஆரம்பித்தேன் உன்னை விட்டு நகரவும் ஆரம்பித்தேன்

பள்ளி சென்றேன் உன்னை தூரம் தள்ளி வைத்தேன்

கல்லூரி சென்றேன் உன்னை மொத்தமாக விளக்கி விட்ட நிம்மதி பெருமூச்சு விட்டேன்
உன்னை மறந்தும் போனேன்

கல்லூரி முடிந்து என் வாழ்வில் கால் வைத்தேன் அப்போது இந்த உலகத்தை பார்த்து பயந்தேன், நீ இருந்து இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது

மேலும் சென்றேன் அப்போது தான் தெரிந்தது நீ என் சாபம் இல்லை வரம் என்று ஆனால் என்ன செய்ய நீ உடன் இல்லை

குழந்தைகள் பெற்றேன் நானே நினைத்தாலும் தொட முடியாத தூரத்தில் நீ

என் வாழ்வை முடிக்கும் தருணம் வந்தது என் அன்பு தோழன் நியும் வந்தாய்

அப்போது தான் தெரிந்து
என் இனிய தனிமையே
நீ இல்லாத வாழ்வு நரகம் என்று

அதனால் தான் என்னவோ அந்த ஆண்டவன் ஒரு உயிர் பிறக்கும் போதும் சரி அதன் பயணத்தை முடிக்கும் போதும் சரி உன்னை ( தனிமையை) துணைக்கு அனுப்புகிறார்

என் அன்பு நண்பர்களே தனிமையை அனுபவியுங்கள் உங்கள் வாழ்க்கை இனிமையாகும்

By
ரம்யா
« Last Edit: August 25, 2024, 02:26:20 pm by Ramya »
💓💖 ரம்யா 💖💓

MurrattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 13
  • Reactions: +2/-0
    • View Profile
  மகளதிகாரம்


எனது கனவு மகள்க்கு...

அழகிய என் மகளே அன்பாய் ஓர் கடிதம்,

 கருவில் நீ வந்த, காலம் முதலாக, கனவும் நீயின்றி இல்லையடி !
கண்ணே...

நட்சத்திரங்கள் மின்னும் ஒளி வானுக்கு அழகு
என் செல்ல மகளின் முக சிரிப்பொலி இல்லத்துக்கு அழகு.எப்போ வரமோ அந்த நாள்.

பிறக்கும் போதே பொன் குழந்தையாகிறார்கள் எனது தேவதை...

தூக்கம் விழித்த பாதி இரவுகளில், மகள் நெற்றி முத்தமிட்டு
மறுதூக்கம் செல்கையில்  சொர்கமாகிறது அவ்விரவு..எப்போ வரமோ அந்த நாள்.

உன் பிஞ்சு கைகோர்த்து,  நெஞ்சம் மகிழ்ந்த கதை,
நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி ...எப்போ வரமோ அந்த நாள்.

முன் விழுந்த இரட்டைப் பற்களின் வழியே கொட்டுகிறது முத்துக்கள் அவள் பேச்சுக்களாக.... ...எப்போ வரமோ அந்த நாள்..

ஒற்றை முத்தத்தில் இரட்டைச் சத்தங்கள் மகள்பேறு மாதங்களில் ….
அவள் மடி தாண்டா மகளுக்கும், என் மனம் தாண்டா என்னவளுக்கும்....

எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..

I'm Urs Rocket 👑 Raja

 

« Last Edit: August 18, 2024, 05:53:37 pm by MurrattuKaalai »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
எங்கே என்னவன்
என அவளின் 🥹 விழிகள் ஒவ்வொரு நொடியும் தேடுகிறது..
பட்ட மரமோ அவளின் நிலை கண்டு சிரிக்கிறது..😒
அவளின் வாழ்வும் தன்னைப் போல் ஆகிவிட்டதென ..😢
அவளின் உள்ளம் தேடுகிறவன் அவளிடம் இல்லை..🙂‍
வேறொரு பெண்ணுக்கு சொந்தம் என்று..
ஆனால் அவள் உள்ளம் ஏற்க மறுக்கிறது..😌
அவளது கரங்களில் இருந்து பறந்து செல்லும் வண்ணத்துப் பூச்சி போல்🦋
அவள் வாழ்வானவனும் என்றாவது ஒருநாள் அவளிடம் வந்து விடுவான்,🥰
அவன் கரங்கள் பிடித்து 🌷
வானில் சிறகடித்து பறப்பேன் என்று உள்ளம் எண்ணியது..🥰
இருள் சூழ்ந்த மேகம் கூட அழகு..🥲
அவனுடன் நான் சேர்ந்து ரசித்த போது..😭
இன்று இருள் சூழ்ந்த மேகங்கள் பார்த்தால் வெறுக்கிறேன்..😨
காலம் கனிகிறது..😰
 என்னவன் இல்லாமல் தனிமையில் 😓
7 நாட்கள் வாழும் பட்டாம்பூச்சியின் வண்ணம் கூட அழகு தான்..🥶
என்னவன் என்னுடன் இருந்தால்..🤗
வீசும் தென்றல் கூட தூது சொல்கிறது 🤭
உலகை காப்பதற்கு வெள்ளை குதிரையில் கிருஷ்ணன் 😍
கல்கி அவதாரம் எடுப்பது போல்,❤️
 என்னவன் என் கரம் கோர்ப்பதற்கு 🥰
வெள்ளை குதிரைகளில் விரைந்து வருகிறான்❤️
கிழக்கில் இருந்து..😍😍😍
கிருஷ்ணனின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் என் 👸🏻ராதை🌷🌷🌷…..

இடி சுழ்ந்த மழை போல் 🥺
அவளின் இதய குமுறல் என் செவியில் கேட்கிறது … 🥹
வான் மீன்களே  தூது செல்லுங்கள்  என்னவளிடம் 🌷
உன் மன்னவன் வருகிறான் 🤴🏻
உன் சோகத்தை அக்னியில்  போட்டு 💥
உன் கரங்களை பிடித்து 🥰
உன் பூ போன்ற கால்களில் 😍
 மெட்டி போட ❤️
வருகிரான்  விரைந்து ..

உன் கிருஷ்ணா💕
« Last Edit: August 24, 2024, 08:35:10 pm by Radha »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
சிறகடிக்க ஆசை.... சிறு வயது முதலே நான் ஆர்வமுடன் பார்ப்பதில்
பட்டாம் பூச்சியும் ஒன்று.. 
மண்ணில் ஊரும் புழுவாக இருந்து தனக்கென ஒரு கூடு தேடி
குறிப்பிட்ட நாளில் பல வண்ணங்கள் நிறைந்த அழகு பறவையாக வெளி வரும்....
அது போல நாமும் நம்மை புழுவாக எண்ணியவர்கள் முன்...
குறிக்கோளுடன் முன்னேறி வர வேண்டும்...இதிலு இருந்து என் கவிதையை தொடங்குகிறேன்

என் இனிய நான்... உனக்குள் இருக்கும் உன்னை தேடு
காதலில் விழுந்தேன் காதலியால் அழுதேன்
நட்பில் விழுந்தேன் நஸ்டதில் அழுதேன்
வேளையில் விழுந்தேன் வியாதியால் அழுதேன்
அன்பில் விழுந்தேன் அரவணைக்க ஆள் இன்றி தவித்தேன்

யாரும் வேணாம் என்று யாசிக்க சென்ற போது தான் உணர்ந்தேன்
என்னுள் என்னை எனக்கே என்னை

அவன் சொன்னான்
உனக்குள் இருக்கும் உன்னை காதலி
உன்னை நேசிக்கும் ஒரே நண்பன் நான் தான்
உன்னை அறிந்த உன்னின் நான் என்று உரக்க சொன்னான்

அவன் வேறு யாரும் இல்லை நான் தான்.....மனசாட்சி

நண்பர்களே கோபம் கொள்ள வேண்டாம் இது உங்கள் அனைவர் மனதிலும் இருக்கும் உற்ற நண்பனுக்காக எழுதிய கவிதை....


Life is very short nanbaaa always be happy 😊😊😊

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்....WTC MAMAKUTTY🫣🤗


Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile

என்னுள் வெற்றிடம் கொண்ட தனி அரை என்று நினைத்தேன் உன்னை

பிறர் நிஜமுகம் கண்டு வெறுத்து உன்னுள் புகலிடம் அடைந்த பின் அறிந்தேன் எந்தன் சுக தூக்கம் அணைத்து நினைவுகள் கொண்ட பொக்கிஷம் என்று

மதுவினும் கொடிய போதை நீ உன்னுள் சுகம் கண்ட எவரும் திருப்ப விடாதே இல்லை
 
மாற்றங்கள் பல கண்ட வாழ்வில் எவர் வாழ்விலும் காணாத மாற்றம் நீயே 

விருப்பங்கள் விலகி செல்ல நீர் கொண்ட விழிகளுடன் தேடினேன் உன் மடியை

விரட்டி விட யாது செய்தினும் துரத்தி வந்து காதல் செய்ய உன்னை போல் எவராலும் இயலாது

வலி தருகிறாய் என்று உன்னை வெறுத்து ஒத்துகினேன்

பின் விளங்கியது அடித்தங்க வால் போர்க்களம் புகாது இக்கலி உலகம் எனும் போர்க்களம் புக தயார் செய்கிறாய் என்று


மழை காணா பூமியில் பயிர் பருவம் எய்தது

உன்னை காணா ஒரு உயிரும் முழுமை பெறாது

சொல்லாடல் பல கண்டு காணாத தீர்வையும் உன்னோடு நான் கொண்ட மௌன உரையாடலில் நீ தந்தாய்

உறவோடு நான் கழித்த கழித்த காலத்தை விட உன்னோட நான் கழித்த காலமே அதிகம்

தனிமையே நீ எந்தன் முதன்மை ஆருயிர் தோழனே
[/b]

Jeni

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +3/-0
    • View Profile
காற்றில் பறந்த ஆசை🪶 :-

ஆசை இல்லா மானிடம் இ‌ங்கு இல்லயே
பெண்ணின் ஆசை என்றாலே பேராசை தான்
அ‌தி‌ல் என்னுடைய ஆசைகள் எண்ணில் அடங்காதவை
அவன் என்னை ஒரு முறை திரும்பி பார்க்கமாடான

அவன் மனதில் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் ஒன்றை ஆவது பேசிடமாடானா

ஆசை வார்த்தையால் அழித்திட மாட்டாயா ?
உன்னுடையவல் என இறுகப்பற்றிக்  கொள்ள மாட்டாயா ?
 
நீ பேசாமல் மௌனித்து சென்ற தருணம் ...
நான் உன்னை எண்ணி வாடி அல்லவா கிடந்தேன் !

நீ உரையாடிய ஒவ்வொரு ம‌ணி பொழுதும் ..
நினைவலைகளில் சேமித்து வாழ்ந்த மடந்தை ஆகினேன்

அமுதே நீ உறங்க மலர் வைத்தேன் முட்கள் மறந்தேன்
நீ மகிழ சந்தோஷம் சேர்த்தேன் அதில் துக்கம் மறந்தேன்

பிழை ஆக ஒரு அடி எடுத்து தவித்து நின்றேன்
அந்த பிழை உன்னை தாக்கி உன் மனம் சுக்கு நூறாக உடைந்தது

நீ என்னிடம் பத்திரமாக பார்த்துக்கொள்
என்று உன் இதயத்தை கொடுத்தாய்!
 
நானோ சுக்கு நூறாக சிதரடித்து விட்டேன்
ச‌ற்று திரும்பி பார் நீ என்னை விட்டு சென்ற இடத்தில்
அதை ஒட்ட முயற்சித்து நின்று கொண்டு இருக்கிறேன் !
 
என் கைகள் மீறி நீ செல்லவில்லை என
உன் கரம் பிடி‌க்க முயற்சித்து நிற்கும் ராமனின் சீதை நான் !✨❤️
« Last Edit: August 26, 2024, 10:40:39 am by Jeni »
Jeni

PraviN

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
நிலவை பார்த்து நின்றவள் இங்கே
நினைவுகள் மட்டும் நிலவயும் தாண்டி
தலைவியின் நினைவோ தலைவனின்பால்
தலைவனும் எங்கோ தூரதேசதில் தலைவியின் பால்
வண்ணத்துப்பூச்சியிடதில் தூதும் சொல்லி விட்டாள்
கடல் கடந்து சென்று என் தலைவநிடம் சொல்லுங்கள்
தலைவன் அற்று இவள் தலை இல்லா முண்டமாய் தனிமையில் வாடுகிறாள் என்று ......❤️❤️❤️

Sri

  • Newbie
  • *
  • Posts: 2
  • Reactions: +0/-0
  • Born to be wild feat
    • View Profile

காத்திருப்பு...!


உனக்காய் காத்திருந்து நிலவுகூட

பகலில் வந்து விட்டது பகல் நிலவாய்

இன்னும் நீதான் வரவில்லை


காக்க வைப்பதில் உனக்கு

அவ்வளவு சுகமா அதைவிட

சுகம் உனக்காய் காத்திருப்பதில்


உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால்

நீ வரும் பாதைகூட உன்னை போல்

அழகாக வெக்கப்படுகிறது


உனக்காய் காத்திருந்து இறந்துபோக

ஆசைதான் உனக்காக கவிதைகள்

பிறக்காமல் போகுமென்றால்


உனக்காய் காத்திருந்து நான்

வாடிப் போகவில்லை

என் கவிதைகளுக்குத்தான்

தாடி முளைக்கிறது


நீ தாமதமாய் வரும்வரை எப்படி

சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை

ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது....


Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
துள்ளி ஆடும் வயதில் தனிமையில்
கலங்கி நிற்கின்றாயே
உன் தனிமைக்கு காரணம்
என்னவாக இருக்கும்

சில காமுகன் கண்களுக்கு பயந்து
நீ விரும்பிய உடையை அணிய மறுத்ததாலயா
அங்க செல்லாத இரவில் சில மனித அரக்கர்கள்
உள்ளனர் என்று
கண்டித்ததற்காகவா
என் செய்வது ஆசிரியர்களிலும்
சில கள்வர்கள் உள்ளனர்

அவர்கள் கண்களில் இருந்து உன்னை
காத்துக்கொள்வதுக்கு தான்
இந்த கண்டிப்பு

கவலைப்படாத நீயும்  தடைகளை உடைத்து
காற்றில் பறவையை  பறக்கும்
காலம் தொலைவில் இல்லை

தயிரியமும் தன்னமிக்கையோடு
படித்து முன்னேறு
உன்னை தாழ்ந்து பார்த்தவர்களை
அந்நார்ந்து பாக்க செய்....

.....
...
மங்கையை பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்