Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 04✨  (Read 1624 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 04✨

✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐Season 04✨
✨SEASON 04✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!
« Last Edit: September 18, 2023, 11:23:39 am by Maari »

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே பல பாடங்களை
கற்றுத் தருமனால்.. நான்
என் வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ
விரும்புகின்றேன்.

தனிமையில் எனக்கு
இனிமை இல்லை என்றாலும்..
அதில் துன்பங்கள் இல்லை
என்பதை உணர்த்த
மறுப்பதில்லை தனிமை..!

தனிமை மிகவும்
வித்தியாசமானது நாமே
அதை எடுத்துக் கொண்டால்
ரொம்ப இனிமையாக
இருக்கும்… தனிமையை
மற்றவர்கள் நமக்கு
கொடுத்தால் அது கசக்கும்.!

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை.!

பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம் அங்கு
என்னை காயப்படுத்த
யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல்
நமக்கு பிடித்தவர்களை
தனிமையில்
நினைத்துக்கொண்டு இருப்பதும்
ஒரு தனி சுகம் தான்.

இன்று நானும்
தனிமையில்.. நான்
காட்டிய அன்பும்
தனிமையில்.. என்
வாழ்வும் தனிமையில்..!

தனிமை என்பது நான்
தேடிக்கொண்ட சாபம்
அல்ல நான் என்
உயிருக்கும் மேலாக
நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு.

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்து கொண்டேன்..
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகிக் கொண்டேன்.

போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட.. தனிமை
ஒன்றும் கொடூரமானது
இல்லை.

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை.

தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம்..
ஏமாற்றிச் செல்லும்
உறவுகளை விட
தனிமையே நம்முடன்
பலகாலம் வாழ்கின்றது.

பல கஷ்டங்களை கண்டு
மரத்துப் போன என்
இதயத்திற்கு தனிமையே
போதுமானதாக இருக்கின்றது.
« Last Edit: September 18, 2023, 09:18:13 pm by Aadhira »

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
தனிமை

அன்னை கருவறையின் அமைதியை உன்னுள் காண்கிறேன்

விரட்டி விட யாது செய்தினும் துரத்தி வந்து காதல் செய்ய உன்னை போல் எவராலும் இயலாது

இன்பத்தில் விலகி நின்றாலும் துன்பத்தில் அணைத்து கொள்ள ஒரு போதும் தவறியது இல்லை

ஆயிரம் ஆசானாலும் கற்றுதர இயலா பாடங்களையும் சிறு பொழுதில் உன்னுள் கற்கிறேன்

வலி தருகிறாய் என்று உன்னை வெறுத்து ஒத்துகினேன்

பின் விளங்கியது அடித்தங்க வால் போர்க்களம் புகாது இக்கலி உலகம் எனும் போர்க்களம் புக தயார் செய்கிறாய் என்று

அன்னையும் அரை நொடி தவறி இருப்பாள் நீ தவறியதில்லை என் துயரத்தில் தோல் குடுத்து துணை நிற்க

மழை காணா பூமியில் பயிர் பருவம் எய்தாது

உன்னை காணா ஒரு உயிரும் முழுமை பெறாது

சொல்லாடல் பல கண்டு காணாத தீர்வையும் உன்னோடு நான் கொண்ட மௌன உரையாடலில் நீ தந்தாய்

உறவோடு நான் கழித்த கழித்த காலத்தை விட உன்னோடு நான் கழித்த காலமே அதிகம்

தனிமையே நீ எந்தன் முதன்மை ஆருயிர் தோழனே
« Last Edit: September 19, 2023, 08:00:22 am by Cup_ICE »

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
"கவிதை எழுத வந்தேன் அடியேன் நானும் இனிய தனிமை தான்"

   ! ஆறு மணி துளிகள்   சூரியனை எழுப்பினாலும்
சூரியனே தனிமை தான்.....
    ! அவன் விழிகளின் விடியலுக்காக காத்திருந்த இரவு தூக்கத்தை தொலைத்த நிலவே தனிமை தான் ........
   
   ! தனிமை இனிமையானது என்று நிழல் கூட தனிமையை தேடி தான்....

      ! பல நாள் அழுதேன் அவள் அன்பை தேடி துடிக்கும் இதயம் கூட தனிமை தான்....

     ! எந்த நொடி நீ வருவாய் என்று தெரியவில்லை?. "பெண்ணே" ஆனால், நீ வருவாய் என்று ஏங்கும் என் உள்ளம் கூட தனிமை தான்....

   ! அடியே நீ இல்லை என்று விட்டு போனாய் என்னிடத்தில்.. ஆனால் உனக்காக நான் இருக்கிறேன் என்று சொன்னது என் இனிய தனிமை தான்....

    ! என் துன்பத்தில் என் புலம்பல்களை பொறுமையோடு கேட்பவனும் என் இனிய தனிமை தான்....

     ! இதை படிக்கும் நீயே தனிமை தான்...

         ...... இப்படிக்கு
                       BLACKED.....
« Last Edit: September 19, 2023, 04:40:47 pm by Maari »

Devathai

  • Newbie
  • *
  • Posts: 2
  • Reactions: +0/-0
    • View Profile
தனிமை

விரும்பாமல் வருவது தனிமை!!

உன்னை காணாத நேரத்தில்
உன் நினைவுகளை நினைக்க
 நான் விரும்ப செய்வது தனிமை!!

நீ தொலை தூரம் இருந்தாலும்
உண்ணில் என் பாதி இருக்கிறது
 என உணர வைப்பது தனிமை!!

என்னை சுற்றி யார் இருந்தாலும்
 நீ இல்லாத வெற்றிடம் 
தனிமை தான் எனக்கு!

ஆனால் இப்போது நீ
 என் அருகில் இருந்தும்
என்னால் உணர முடியவில்லை!!

 நீ எனக்கானவன்
இல்லை
 என உணரும் தருணம்
 இந்த தனிமையை வெறுக்கிறேன் 😢


நீ ஏண்ணுள் இருந்தும் எனக்காக இல்லாமல்
 நீ நிறப்பும் வெற்றிடம்  நான் மறுக்கும் என் மகிழ்ச்சி புன்னகை
அத்துனையும் உன்னில் வந்து நிலைக்கட்டும்.... 😘😘

உனக்கான என் காத்திருப்பு
நீ எனக்கு விட்டுச்சென்ற தனிமை போல
என்றுமே மாறாது
என்றும் என் உயிர் உன்னிடமே......
« Last Edit: September 19, 2023, 05:35:32 pm by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 25
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
கண்ணீரின்றி அழுகிறேன்
சத்தம் இன்றி புலம்பிகிறேன்
அழுகுரல் இன்றி அழுகும்
எனக்கு ஆறுதல் கூற வந்தவன் தான்
..............தனிமை ........

அடைந்த காயகளிலும்
மீள துயரங்களிலும்
என்னை மீட்டது
தனிமை இசையும்தான்
தனிமை விரும்பியை
பித்தன் என்று சொல்லுவார்கள்
வஞ்சம் நிறைத்த உலகில்
பித்தனை இருப்பது மேல்
தனிமை தான் ஒருவனது
படைப்பு திறனை பெருக்கி
அவனை தனித்துவமாக காட்டுகிறது
தனிமை பழகியவனுக்கு
மின்விசிறி இரைச்சல் கூட ஓசையை மாறும் நாயின் இரைச்சல் கூட கீதமாய் தோணும் அமானுஸ்யம் பத்தி பயப்பட தேவையில்லை அவன் வாழ்வே அமனுஷியம் நிறைந்தது தான் தனிமை எனக்கு பிடிக்கும் என்று அரவணைத்தேன்
ஏனோ என்னை விட்டுச்செல்ல மறுக்கிறது என்றும் பிறக்க முடிய பந்தம்
நானும் என் தனிமையும்
« Last Edit: September 20, 2023, 08:49:58 am by Maari »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
தனிமை அமிர்தம் போன்றது – ஏனெனில்
அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு தான்
அதுபோல தனிமையும்…….
அனைவரின் வாழ்விலும் தனிமை ஒரு அங்கம்
கோடி உயிர் அணுக்களில் தனித்த ஒரு அணு தாயிடம் சேர்கிறது
கருவறையில் தொடங்கி கல்லறை வரை
நம்மோடு பயணிக்கும் நல்ல நண்பன் தனிமையே
தனிமையில் இருக்கும் போது தான் தன்னலம் உணர முடியும்
என் இளம் பருவம் வரை தனிமை அறியா நான்
அறிந்தேன் தனிமையை என் அண்ணனை பிரிந்த நாளன்று
தனிமையின் இனிமை இதோ,
எனக்காக வரும் அவள் என்னை விட்டு ஏழாம் மாதம் பிரியும்
போது வரும் தனிமை இனிமையானது (வளைகாப்பு)
என்னவள் என்னிடம் 🥺 எனக்கு முன் சென்ற நாள் முதல் வரும்
தனிமை கொடிது

இளமையின் தனிமை இனிமை♥️♥️♥️
முதுமையின் தனிமை கொடுமை🥺🥺🥺

என் இனிய தனிமையே.......

1000 கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆதி......


« Last Edit: September 20, 2023, 02:36:47 pm by Maari »

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile

*ஒரு எளிய பெண்ணின் எண்ணங்கள்***
வாழ்க்கை மேலேயும் கீழும் செல்கிறது..😌😌
கடல் அலைகள் போல்... 🌊🌊
எனவே அமாவாசை அன்று
நிலவு போல் ஒளிந்து கொள்ளாதே...
 பௌர்ணமி அன்று நிலவு போல் எப்போதும் ஜொலிக்க...🎑

சில நேரங்களில் நாம் பலரால் மதிக்கப்படுகிறோம்..☺️
சில சமயங்களில் பலரால் புறக்கணிக்கப்படுகிறோம்..😇
எனவே நமது சொந்த முகாமை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்..💃
 நம் வாழ்க்கையை வண்ணமயமாக வர்ணிப்பதன் மூலம்..🌈
நம் வாழ்க்கைத் துணை எப்போதுமே அதிக அக்கறை காட்டுவார்...💕
 நம்மைத் தனிமையில் விடாதவர் அவர் மட்டுமே...
   உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே..
எப்பொழுதும் என் கையை பிடித்தவர்...💕💕
« Last Edit: September 20, 2023, 07:25:00 pm by Maari »

Tiso20

  • Newbie
  • *
  • Posts: 11
  • Reactions: +0/-0
    • View Profile
❣️"தனிமை எனக்கு மிகவும் பிடித்தது அல்ல
அனால் இந்த தனிமை உன் நினைவுகளை..😌
எனக்கு மகிழ்ச்சியாய் பரிசு 😇 அளிக்கும்
பொழுது இந்த தனிமை கொஞ்சம் பிடிக்கிறது" ❣️

❣️"தனிமை எனக்கு மிகவும் பிடித்தது அல்ல
அனால் இந்த தனிமை தான் என் வாழ்வை
முனோக்கி எடுத்து சென்றுள்ளது என்று எனும் போதில்
இந்த தனிமை கொஞ்சம் பிடிக்கிறது"❣️

❣️"தனிமை எனக்கு பிடித்தது அல்ல
அனால் இந்த தனிமை தான் என் தவறுகளை சிந்திக்க
ஒரு வாய்ப்பு தருகின்றது என்பதை எண்ணும் போதில்
இந்த தனிமை மிகவும் பிடிக்கிறது"❣️

❣️"தனிமையில் இருப்பது ஒரு அற்புதமான
உணர்வு தான், அனால் தனிமையில் மட்டுமே இருப்பது கடிதம் தான்"❣️

                                                                                   From - Tiso
« Last Edit: September 21, 2023, 10:31:55 am by Maari »

Vallavarayan

  • Guest
தனிமை ஒரு சுகமான சுமையே!
தனிமை சுகமே என்னவள் வருகைக்காக
காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

தனிமை ஒரு வரமே நம் வாழ்வில் நமக்கென இறுதி வரை நாம் மட்டுமே என்பதை உணர வைத்தது தனிமை

நாம் ஆடித் திரிந்த நாட்களையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது தனிமை வேதனையே

ஓடியாடி திரியும் காலமெல்லாம் தனிமையை உணர்ந்ததில்லை  வயது முதிர்ந்து அடங்கி கிடக்கையிலே என்னவள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனை உறவுகள் இருந்தும் அது தனிமையே
அந்த தனிமை நம் இருவருக்கும் வேண்டாம்
 பிரிவோம் இருவரும் இணைந்து இறுதி கால தனிமையை  என்னை விட்டு நீயோ உன்னை விட்டு நானோ அனுபவிக்க முடியாது இருவரும் இணைந்தே செல்வோம்