Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐💥Season 12💫  (Read 1720 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 12💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
தனிமையிலே தொலைந்து..
உதிரமில்லா இதயத்தின் புலம்பல் கேட்கிறதா....
விண்ணோடும் இல்லாமல் மண்ணோடும் இல்லாமல்...
வழி நடுவில் வலியாய்...
யாரிடமோ பயணம் சொல்ல மறந்தது போல்
அங்கும் இங்குமாய் சிறகடிக்கிறது....

ஒஹ் மனிதா...
என்னை தள்ளி போகாதே....
உடல் விட்டு உயிர் ஓடிவிட்டது...
இப்போது உடலும் இல்லை..உயிரும் இல்லை..
தனிமை வாட்டுகிறது....

உடல் அடக்கமானதும்
குடும்பமே என்னை விட்டு பிரிந்து விட்டது ..
உள்ளம் நினைத்து உறவை தேடி போனால்....
என்னை பார்த்தவுடன் நடுக்கதில் ஓடகின்றனர்.....

உறவே நான் என்ன பிழை செய்தேன்...
உறவை தேடி நான் வந்தது அது  என் தவறா?...
அல்லது என்னை மறந்து பிரிந்தது உங்கள் தவறா?...
 பகலிலே என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை....
 இரவிலே என்னால் நடமாடமல் இருக்க முடியவில்லை....

இரவு என்னை நிம்மதியாய் உறங்க விடாமல்....
நினைவுகளால் அலைய விடுகிறது...
தொலைத்த என் உறவை தேடி
கால் இல்லாமல் காற்றோடு மிதந்து வருகின்றேன்....

உறவோடு இருக்கும் போது
சென்ற இடமெல்லாம் தலை கோதி
போய் வா மகளே என்று சொல்லி அனுப்பும் உங்கள் வார்த்தை...
இப்போதும் என் காதில் ஒளித்து க்கொண்டு தான் இருக்கின்றது....
 
கடைசி நிமிடத்தில் ஏன் கூற மறந்தீரோ
 போய் வா என்று...
விடை தெரியாமல் அலைந்தோடி
வருகின்றேன் தெருவோரம்....
விடை கிடைக்காமல் செல்லவும் மாட்டேன் என் நிரந்தர இல்லத்திற்கு.....

வெளிச்சத்தை தொலைத்து இருளுக்குள் அடங்கி விட்டேன்...
என் நிறைவேறாத ஆசையால் நினைவுகளை தேடுகின்றேன்....
வா என்னிடம்... போய் வா என்று சொல்ல மறந்தாயோ...
உறக்கமில்லதா என் இரவுகளுக்குள்...
இரக்கமில்லாமல் என்னை தொலைத்து விட்டாயே ....

 நினைவோடு நான் இருக்கும் வரை
இரவோடு கலந்த என் பயணம் தொடரும்....
இப்படிக்கு நான் தான் உங்கள் பக்கத்தில் இருக்கும் ....
ஹாஹா ஹா ஹா சட்டென்று திரும்பி பார்க்காதே
நடுக்கத்தில் உறைந்து விடுவாய்....🙄

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
பள்ளி காதல்.. 8)
[/font][/size]


💗💗💗பள்ளிச் சோலை
பரிவூட்டும் காலை நேரம்
அழகு நடைபோடும்
சின்னஞ்சிறு ரோஜா பூ
தன் ரெட்டை ஜடையால்
கட்டி இழுத்த குட்டி மாயம் செய்த தென்மிட்டாய்❤️❤️❤️

💗💗💗எந்தன் காதல்
பரிவர்த்தனையில்
அவள் வைத்த
முதல் பாத அடி
பார்வையில்
ஓர் படுகொலை🫣❤️❤️❤️

🥺🥺🥺பள்ளி அருகே நின்று
அவள் பார்வைக்காக
காத்திருக்கும்
அந்த நொடிகளில்
அவள் பகல் நிலவாய்
காட்சியளிப்பாள்
பளிச்சென்று🫣🫣🫣😍😍😍

😶‍🌫️😶‍🌫️😶‍🌫️அவளருகே ஓர் சில நொடி
அதற்கே நான்
பல யுகத்தின் பலனதுவாய்
தவமிருந்தேன் - மனம்
துறந்த துறவியாய்🥹🥹🥹

🥲🥲🥲மாயமகள் அவளின்
மனங்கனிந்த
காதல் வார்த்தைகள்
மாங்கனியுள்ளே
தேன்துளியாய்
என் நினைவெல்லாம்
தித்தித்திடும்
நித்தம் ஒரு திருநாளாய்☺️☺️☺️

🥹🥹🥹அவளுடன் இருக்கும்
ஒற்றை நொடி பொழுதில்
இரவும் பகலும் என்பதே
தேவையில்லாமல் போகிறது💖💖💖

😇😇😇அழகு ஜீன்ஸ் அணிந்த
என் சின்னக்கிளியின்
சிரிப்பைக் காண - நான்
சிறப்பு வகுப்பிலும்
சிறகடித்து காத்திருப்பேன்😇😇😇

🫂🫂🫂அவளோடு சில பயணங்கள்
அவை பள்ளி முதல் வீடு வரை
அது சிறு தூரமாக இருந்தாலும்
அதுவே என் வாழ்வின் மிகச் -
சிறந்த பயணம். 💖💖💖

என்றென்றிலும்
வானவில்லாய் வந்த
என் சுவாச பூங்காற்று - அழகு
வர்ணங்களை தந்துவிட்டு
கண்களை களவாடியதே
கடவுளின் கையெழுத்து

அவளது அன்புத் தூரளில்
நிறைந்து போன - என்
மனதும் நினைவும் - இன்று
அவள் வருகையொட்டி
உறைந்து நிற்கிறது
ஓர் பனிக்கட்டியைப் போல்

அவளது நினைவில் பிழைக்க
முயன்ற நாட்களெல்லாம்
மீண்டும் மீண்டும் மூழ்கத் -
தான் கற்றுக்கொண்டேன்

உள்ளம் என்னும் கோட்டையை
அவள் உடைத்து சென்ற பின்னும்
என் சுட்டி தேவதையின் - அந்த
குட்டி முகம் என் நெஞ்சில்
இன்பத்தை தூவிச் செல்கிறது
சிறு துன்பத்தோடு

சிரிப்போடு சில நிமிடம்
சினத்தோடு சில நிமிடம்
இன்றும் சிந்தித்துப் பார்க்கிறேன்
எங்கே ?
என் தேவதை என்று.......

முதல் காதல் முதல் கவிதை, ஒவ்வொரு நாட்களில்......🙏🙏🙏🙏


எ ன் முதல் காதல் செஞ்சா பொண்ணுகு அர்ப்பணிக்கவும் என் 11வது படிச்சா அப்போ பன்னா காதல் அவள் விபத்துலா இறந்தார் , this topic Pic ena romba disturb panidichii😢😭😢
Miss u all 😥😓😥😥😥
« Last Edit: January 25, 2024, 09:14:52 am by Jackey pondiyan »
♥️Murrattu kaalai♥️

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
   *இப்புகை படத்தில் வரும்  ஒரு ஒத்தை அடி பாதை,  அதில் ஒரு ஆவியாக நிற்கும் பெண்,  சுற்றி அடர்ந்த காடு, இருள் சூழ்ந்த இடம்....என்னவாக இருக்கும்?

        (இது என் கவிதை)

ஒத்தை அடி பாதை:-
    யாரும் வராதா பாதை நான்..
   என் பாதையில் நீயும் வந்தால் உன் மௌனம் கூட என்னிடம் பேசும்..
    தனிமைகள் கூட எனக்கு சொந்தம்..
   போ! நானே உன் பாதை.... தொடக்கமும் நானே முடிவும் நானே ........

ஆவியாக நிற்கும் பெண் :-
    பிறப்புக்கும் நானே, ஆணின் பலமும் நானே எல்லாம் நானே...
    சோர்ந்து போகிறேன் இறந்த பின்பு கூட..
    வழியில் விட்டுச்சென்றேன் சில நம்பிக்கையோடு வலிக்கும் என்று நம்பிக்கையே போனது...
     இந்த இருள் கூட எனக்காக தான் காத்திருக்குமோ நினைத்து வந்தேன் ஆனால், நான் நின்றேன் இருளில்! நானே இருளாகினேன்......

அடர்ந்து காடு :-
    விண்ணை  முட்டும்
மரங்கள்..
   ஒளிகூட  ஊடுருவ  சிரமப்படும்..
    வருடத்தில் வரும் நாட்களின் 
தேதி கூட இல்லை,
எத்தனை  நாட்கள்
கழிந்தன என்ற
அக்கறையும்  இல்லை ..
    தனிமையில்  முடிவில்லாமல்
நீண்டு கொண்டிருந்த
இருளை தூங்க விடாமல் ரசிப்பவன்...

இருள் சூழ்ந்த இடம் :-
    பயத்தின் சாணக்யான் நான்..
    உலகமே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும் என் இருளில் உன் பயம் தான் எனது பலம்..
    என்னை விட்டுப் போனால் வெலுச்சம் தான் மிச்சம் ஆனால் என்னை தேடி வந்தால் தனிமையே உச்சம்...
     நீ பிறக்கும் முன் உனது இருளும் நானே, உன் கல்லறையில் எட்டிப் பார்த்தவனும் நானே..

Disclaimer
     இந்த கவிதையில் வரும் எல்லாம் எனது கற்பனையே  முழுக்க முழுக்க கற்பனையே....
           
          இப்படிக்கு
                 அன்றும்
                    இன்றும்
                       என்றும்
     "நியாபகம் வருகிறதா இவன் யார் என்று தெரிகிறதா உங்கள்"
                         ...............................
                           :😎BLACKED😎:
                         ...............................

Arvvvind

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
ஒவ்வோரு இரவும் என் மனம் உன்னை தேடும் ,
யாரும் இலத எந்தன் வாழ்கையில் உந்தன் இசை பாடும்,
நீ இரவில் மட்டும் தோற்றில் என் இதயத்தை உடையாய் ,
கனவிலும் வந்து ஈனத்து தூக்கத்தை துலைத்தாய்

நீ இல்லாத இரவே எனக்கு அமைந்தது இல்லை
நான் உன் உருவத்தை பார்க்க எங்கும் ஒரு சிறு பிள்ளை,
உன்னை நம்பும் அணைவருக்கும் நீ இருபாய் துணையாய்,
மற்றவர்களுக்கு நீ ஆகி விடுவாயே வினையாய்.

ஊர்வுகள் மாறி கொண்டே இருக்கும் மனிதர்கள் மதியில்,
உந்தன் உணர்வு என்றும் பயம் கொடுப்பது சம நிலையில்.

மதியத்தார் வாசல் மிதித்தேன் எங்கிரா பழமொழிக்கு ஆப்பு வைத்து,
எந்த வாசலாக இருந்தாலும் பீதி வர வைப்பேன் என்று மட்டும் அமைத்து,
உன்னை எதிர்க்கும் மனிதர்களை ஒன்று கூட வீடு சம நிலை புரிய வைத்தாய்


இருட்டில் இருக்கும் உன்னை காண நினைப்பவர்கள் , பகலில் உன்னை மறந்து விடுகிருர்கள்..நன்றி கெட்டவர்கள்..
இனி நீ பகலிலும் வந்து பீதியய் கெளபிவையாகா!!!




Charlotte

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +2/-0
    • View Profile
இரவு நெருங்க நெருங்க ஏதோ ஒர் உணர்வு...
எப்படி கடப்பேன் இந்த இரவை இனி...

இரவில் அவனோடு கைபேசியில் உறையாடிய எனக்கு இந்த இரவு எப்படி முடியும்...

இரவில் அவனுடன்,
கதை பேசி கழித்த எனக்கு இனி இந்த இரவு கண்ணீருடன் முடியுமா?

இனி தொடரும்  இரவுகளின் நிலைமை தான் என்ன?

உன்னோடு நடந்த இந்த பாதையில் இன்று நான் மட்டும் தனியாக உன் நினைவோடு...

உன் கை கோர்த்து ரசித்த அந்த நிலவை இன்று நான் மட்டும் ரசிக்க...

உன்னுடன் கேட்டு ரசித்த பாடல்களை இன்று நான் மட்டும் கேட்கிறேன் தனியாக...

உன் முகம் பார்த்து சிரித்த நான் இன்று உன் நினைவுகளோடு சிரிக்க...

எண்ணம் எல்லாம் ஒன்று தான்...
இந்த தனிமை இரவு இன்றுடன் முடியாதா...

ஏங்குகிறேன்...
என் காதல் புரிந்து நீ திரும்பி வருவாயென...
என் கரம் பற்றி நடப்பாயென...
என் முகம் பார்த்து சிரிப்பாயென... என்னுடன் சேர்ந்து அந்த நிலவை ரசிப்பாயென...

காத்திருக்கிறேன்
நினைவுகளுக்காக அல்ல
நிஜத்திற்காக...


-Charlotte-
[/i][/color]

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
சின்ன வயதில் இருந்தே பேய் கதைகள்
எனக்கு பழக்கமானவை தான்…
சாப்பிட அடம்பிடித்தால் பூச்சாண்டி வரான்
புடிச்சிட்டு போயிருவான் என்று சொல்லி
அம்மா சோறு ஊட்டுவாள்
இரவில் தூங்க மறுத்தால்
தூங்கு அந்தா பேய் வருது
என்று பயம் காட்டி தூங்க வைப்பாள் பாட்டி
சிறிது வளர்ந்ததும் விளையாட சுற்றும்
என் கால்களை அடக்க
புளிய மரத்துல  பேய் இருக்கு
அங்கலாம் பசங்க கூட சுத்தாத என்று
பயமுறுத்தி வைப்பார் அப்பா 
வளர வளர முருங்கை மரத்தில
பேய் தொங்குன கதை விக்கிரமாதித்தன் கதை
மல்லிகைப்பூ வைச்சு பசங்கள புடிக்கிற கன்னிப்பேய் கதை
காலை விறகாக்கி அடுப்பு எரிச்ச மோகினி பேய் கதை
இப்படி பலப் பல கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான் 
வளர்ந்த பின் அறிவு வந்த பின்
உலகில் பல பேய்கள் உலவுவதை கண்கொண்டு பார்த்தேன் நான்
பணப்பேய்கள் அதிகாரப்பேய்கள் ஜாதிப்பேய்கள்
என பலவிதமான பேய்கள் மனிதரினுள்ளே ஒளிந்திருப்பதை அறிந்தேன்
ஆவியாய் அலையும் பேய்களை விட
பகலில் மனித முகமூடியோடு உயிருடன் அலையும் மனிதப்பேய்கள்
ஆபத்தானது என உணர்ந்து கொண்டேன்
எனக்குள்ளும் பேய்கள் இருக்கின்றன
சில நேரம் அவை வெளியே வந்து தலைகாட்டும்
அதை அடக்கி ஆள போராட்டமே நடக்கும்
சில வேலை நான் தோற்றுப் போவதும் உண்டு
நான் மட்டும் அல்ல நம்மில் பலரும் கூட… 

சிலநேரங்களில் மனிதர்களை விட
பேய்கள் நல்லவை என்றே தோன்றுகிறது

பிறர் துன்பத்திற்கும் துயரத்திற்கும் காரணமாய் இல்லாமல்
மனித மாண்புகளோடு மனிதர்களாய் இருப்போம்
மனிதம் போற்றுவோம்!!!
« Last Edit: January 23, 2024, 08:20:29 am by Sanjikun »

LOVELY QUEEN

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 14
  • Reactions: +4/-0
    • View Profile
நிலமெல்லாம் நீயாக
நினைவெல்லாம் நீயாய் மாற,
நிறைந்து ததும்பும்
உன் நினைவுகளை நீக்கவே,
நித்தமும் போராடித் தோற்கிறேன்!!

தோல்வி தந்த காயம்
என்னைத் துரத்தியடிக்க,
தூங்காத இரவுகளும்,
துடிக்கின்ற என் இதயமுமே
அதன் மௌன சாட்சிகள்!!

உன் பிரிவைத் தவிர
பெரிதாய் ஒன்றும் காரணமில்லை
என் வலிகளுக்கு!!
வலி நீங்க
விழி நீரை மட்டுமே
வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்!!!

ஊர் சேரும் வழிகளில்
என் கண்கள் இல்லை..
உனைச் சேரும் வழிகளில் மட்டும்
கவனம் முழுவதுமாய்!!!


« Last Edit: January 24, 2024, 07:54:00 am by LOVELY QUEEN »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
என் கனவில் வரும் காரிருள் கருவண்ண பெண் – அவள்
பெயரோ என்னவள்…
என் மனகோட்டையை திறக்க போகும் மணவாளல்…
என் மனகோட்டையின் வாயில் தேடி தினந்தோறும்
ஒற்றையடி பாதையில் வந்து வந்து நிற்கிறாள்
என் கோட்டையின் சாவியோ அவள் பெற்றோரிடம்
உள்ளது என்பதை அறியா பேதையாக….என் செய்வேன்
என் செய்வேன்….என்னவளை அடைய…..
கை கோர்க்க நினைக்கும் தருணங்களில் கரைந்து போய் விடுகிறாள்
கார்குழல் கரு கூந்தல் காரி….
ஒரு வேளை காதலித்து இருந்து இருந்தால் கள்ள சாவி ஒன்று
செய்திருப்பேன்….. காதல் கன்னி பையன் என்பதால் என் இதயக்கதவு
இறுக்கமாக உள்ளது……
என் தாயின் கரம் நம்மோடு சேரும் நாள் வரை காத்திருப்போம்
நான் உன் கணவனாகும் நேரத்தில் என் மனகோட்டையில் மகாராணியாக
மகுடம் சூடுவாய்…..அன்பே பேர் அன்பே பொறுமை கொள்….
நீ இல்லா மணவறை கூட மரண அறை தான்…
நீ கருப்போ செவப்போ மஞ்சலோ வெள்ளையோ என் மனதில்
உலக அழகி நீ தான்
என்றும் காதலுடன் உன் கண்ணாளன்….

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன்
சச்சின் VJ