காதல் என்பது அழகு என்றால், ஒரு தலை காதல் இன்னும் அழகு அதிலும் பெண்களின் ஒரு தலை காதல் பேரழகு..
இரு இதயங்களுக்கான ஒரு உணர்வு காதல் என்றால் இரு இதயங்களுக்கும் சேர்த்து ஓர் உணர்வு என்பது ஒரு தலை காதல்,
ஒரு பெண்ணின் ஒரு தலை காதலை பற்றி ஒரு கற்பனையான கவிதை,
அவளுக்கு அவன் மட்டும் தான் பேரழகன், அவனிடம் அப்படி என்ன தான் உள்ளது என்று அனைவரின் கேள்விக்கும், புன்னகையை மட்டும் பதிலாக அளிப்பவள்,
அவனின் ஒரு நொடி கடைக்கண் பார்வைக்காக நாள் முழுவதும் காத்திருப்பவள், அவனிடம் பேச கட்டுரைகளை தயார் செய்து வைத்தாலும் அவன் முன்பு மௌனத்தை மட்டும் வெளிப்படுத்துபவள்.
அவனிடம் இருந்து வரும் ஒரு குறுஞ்செய்தியை பார்த்து ஓர் காதல் நாடகத்திற்கே ஒத்திகை பார்த்தவள்., அவளின் அத்துமீறும் ஆசைகளுக்கு விதிமுறைகள் இருக்கிறதா என்ன??அவள் அவனை பார்க்கும் போதிலும் சரி, அவன் அவளை பார்க்கும் போதிலும் சரி அவள் இதயத்தை நொறுக்கி விடுகிறது அவன் காந்த பார்வை, இருந்தும் அவனையே தேடும் அவள் விழிகளை என்னவென்று சொல்வது, இது முட்டாள் தனம் என்று புத்திக்கு உரைத்தாலும் அவள் மனது எங்கே கேட்கிறது, அந்த முட்டாள் கூட்டத்தில் நானும் ஒருத்தியாய் இருந்து விட்டு போகிறேன் என்று கூறுகிறாள்.கை கூடாது என்று அறிந்தும், கை கோர்க்க துடிக்கும் அவள் மனதிற்கு எப்படி சொல்லி விளங்க வைப்பேன், கானல் நீரில் மீன் பிடிக்க இயலாது என்று..
அவனோடு சேர்ந்து வாழ முடியாதெனினும் அவன் நினைவுகளை நிஜமாக்கி கனவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் அவள்...
ஒருதலை காதல்
தறுதலை காதல் தனம் என்று கூறினாலும்,
சொல்லாத காதல்
பேசாத வார்த்தைகள்
அனுப்பாத கவிதைகள்
வெளிப்படுத்தாத உணர்வுகள்
கொண்டாடாத காதலர் தினம்,
என்று இப்படி நிகழாதவைகளாக இருந்தாலும் கூட, அவன் மீதான காதல் மட்டும் என்றும் அவளுக்கு குறையாது,
ஒரு தலை காதல் என்பது ஒரு சுகமான இம்சையே..!! ❤️❤️