Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💫Season15💥  (Read 1349 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
]
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 15💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
என் அன்பு தோழனே நலமா,

என் கன்னத்தை தீண்டும் சில்லென்ற காற்று சொல்லும் உன் வருகையை

காற்றில் வரும் மெல்லிய மண் வாசம் போதும் வருவது நீ தான் என்று அறிய

வா வா நண்பா என் தனிமையில் இருந்து என்னை மகிழ்ச்சிக்கு கூட்டி சென்றவன்

ஆனால் என்னவோ தெரியவில்லை உன்னுடன் நான் இருந்தால் அம்மாவும் பாட்டியும் திட்டுவார்கள் காரணம் எனக்கு ஜலதோசம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியாது நம் நட்பு

சரி சொல் நண்பா அந்த மலையின் உயரத்தில் இருந்து வருவதால் உனக்கு பெயர் மழையா...

நமக்குள் எப்படி இந்த நட்பு உண்டானது நியும் என்னை போல் கலப்படம் இல்லாமல் இருப்பதாலோ..

பாசதிலும் சரி கோபத்திலும் சரி என் குணம் கொண்டவன் 🤣 பாசத்தை அதிகம் கொடுத்து கொள்வது மற்றும் கோவம் என்றால் முகத்தை கூட கட்டாமல் இருப்பது

ஏது எப்படியோ ஆனால் என்னை பார்க்க மட்டும் அடிக்கடி வா நண்பா

ஏன் என்றால் நீ மட்டும் தான் நான் அழுதால் கூட மற்றவர்களுக்கு கட்ட மட்டாய்

இப்படிக்கு
உன் வருகை தேடி காத்திருக்கும் அன்பு தோழி ரம்யா
« Last Edit: March 07, 2024, 02:22:54 am by Ramya »
💓💖 ரம்யா 💖💓

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
   காதலில் கலந்த மழை


எத்தனை நாட்கள் பிரிந்து கடந்தாலும்
உன் மீதான காதல் ஈரமாய் அப்படியே இருக்கிறது
மழையைப் போல....!!!

நீ எங்கு இருக்கிறாய் தெரியவில்லை
தெரிந்து கொள்ள விருப்பமில்லை....ஆனால்.....!!!!
எப்போது மழை வருகிறதோ.  அப்போதே வந்து விடுகிறாய்..
என்னை அன்னைத்து முத்தமிட மழையைப் போலவே...!!!

என் தனிமை இரவுகளில் பேசுவதற்குக் துணை இல்லாமல்
தொலைபேசி வெறித்து பார்த்துக்  கொண்டுருக்கிறேன்....!!!

இடியும் காற்றின் வேகமும் என் தனிமையின் பயத்தை
தின்று தீர்க்க...!!!

மழையில் அழுது அழுது உன் நினைவுகளை கரைத்துவிடலாம்...!!!
 என மழை நீரில் முழ்கி
அழ  அழ கண்ணீர் உறைந்து பனி மலையாகி....!!!
உன் நினைவு என்னும் பாரம் கூடிகொண்டே தான் செல்கிறது.....!!!!
உன் நினைவும் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் , கரையும்
என நம்ப நம்பிக்கை இழகிறேன்...!!!

என் தனிமைக்கு மழையின்  காதல் போதும் உன் காமம் வேண்டாம்...!!!


என் ஒரு மழை நாளைக் கொண்டாட,
ஒரு கோப்பை தேநீர்.
இரவுவரைஇளையராஜாவின் இசை.
 தனிமையில் ஒரு LonGggggggg Drive.....
....

Thanks Urs

  MurrattuKaalai ❤️ Mr DoN
« Last Edit: March 12, 2024, 11:56:00 am by Jackey pondiyan »
♥️Murrattu kaalai♥️

Ashwin_

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
    • View Profile
மழை நீரும் ஊற்றாய் ஓட..
எண்ணமெல்லாம் எண்ணியதோ
சிறு வயதில் விட்ட காகித கப்பலை.

வறண்ட பூமியை நீர்நிலையாய்
மாற்றினாய்..
உன்னால் இன்று சிரிக்கிறான்
விவசாயி..
உனக்காக காத்திருந்த நெற்பயிரும்
நன்றிகள் சொல்லுதே.

மேக வெடிப்பில் பூமிக்கு வந்தாய்..
சூட்டை தனித்தாய்..
ஏனோ ஏழையின் வீட்டையும்
இடித்தாய்.

கோபம் கொண்டால் வெள்ளம் ஆகிறாய்..
கர்வம் கொண்ட மனிதனை கொஞ்சம்
கெஞ்சவும் வைக்கிறாய்.

வெள்ளத்திலும் பஞ்சத்திலும் மனிதன்
மறந்த மனிதத்தை நினைவூட்டி
செல்கிறது மழை.

மண் மீது உள்ள காதலால்
மறந்து சாய்கிறாய்..
உச்சி முதல் பாதம் வரை
எனை உரசிப் பார்க்கிறாய்..
தூர நின்று நான் பார்த்தால்
குளிர் காற்றை வீசுகிறாய்.!

வண்ண வண்ண நிறம் பூசி
வானவிலாய் மிளிர்கிறாய்..
உலகத்திற்கு உயிர் தந்து
உன்னை நீயும் இழக்கிறாய்.

மஞ்சள் நிற வெயில் கூட
உனை பார்த்து கரைகிறது..
உன் மீதுள்ள பயத்தால் தான்
சூரியனும் மறைகிறது.

வானம் மனம் குளிர்ந்து தன் உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும் “மழை”.

முதல் மழையில் சில்லென
மாறியது சூழல்..
சில மணித்துளிகள் பெய்த மழையில்
வெயிலின் வியர்வை துளிகள்.

மழைத் துளிகளாய் முதல் மழையோடு
முடிந்து போவதில்லை வானிலை..
அடுத்தடுத்து பெய்யும் மழை.! Endrum anbudan malini teacher 🫂🥰

Mayuu

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
Hi frnds elaru epdi irukenga
after long days na kavitha podren
Mazhai
வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!

முந்தி வரும் -முதல் துளிகள்...
வாசற் கோலம் கொத்தும்

கண்ணாடி திரளாய் மண்ணில் விழும்
கண் பார்க்கும் முன்னே திரண்டு ஓடும்

முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!

Thank you frnds

gata

  • Newbie
  • *
  • Posts: 7
  • Reactions: +3/-0
    • View Profile
Hai frnds nan ipo kavithai sola pora ellarum kelungaa
Ne epothu varuvai ena nan manam urugi vadi kathu irruka
Idyum minalanum un varavai parasalika
Pongarum unaku poo thura
Unai Eni vadi irukum manam nanoo
Un muthalthuli enaku muthamai inikirathu
Un alavarta anbum ada malaiyai en methu polikirathuu
Ne pirikaiyil ena na seivenooo
Un varukaiguu Engum mannam enathooo
Un mutha siripil  enai annu thinamum nalaiya seiya aintha varunanai vendi indru nikeren
Epooluthu vanthu un kathalai en meal maalaiyaga polivaii
Ipadi ku un kadhalan nelam

Thank you all my friends

Thendral

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
~மழையும் அவனும்~
மழை வரும்போதெல்லாம் அவன் ஞாபகங்கள் முந்தி  கொண்டு வருகின்றது..
 மழை போல தான் அவன்,
பேசும் சொற்களே சங்கீதம் ஆவதும், கண்களை ஊடுருவி பார்க்கும் பார்வையும், மழையினுடன் வரும் தென்றலும், எதிர்பாராமல் வரும் மின்னலும் ஒன்று தான்..
மழை போல தான் அவன், ஆசையாய் நனைத்து விடுகிறான் , பாசமாய் துவட்டி விடுகிறான், மோசமாய் என்னை நனைத்து விட்டாலும் மோகமாய் என்னை அணைத்தும் கொள்கிறான்...
மழை போல தான் அவன்,
அவனாகவே வருகிறான்
அவனாகவே செல்கிறான்..
எப்போது வருவான் என்று தெரியவில்லை, சில நாட்கள் தொடர்ந்து வருகின்றான், சில நாட்கள் விட்டு விட்டு வருகின்றான், சில நாட்கள் வருவது போல் போக்கு காட்டி விட்டு வராமல் சென்று விடுகிறான்..
சில நேரங்களில் சில்லலென்று காற்றடிப்பது போல, அவன்  பூ முகத்தை மட்டும் காட்டி மனத்துக்குள் சந்தோசம் தோன்றும் முன்னே அதை பறித்தும் சென்று விடுகிறான் ..!!
மழை போல தான் அவன்,
எதிர்பார்த்து காத்திருந்த போதெல்லாம் வராமல் பாலை நிலம்போல தவிக்கவிட்டு,நினைக்காத நேரத்தில் அன்பு கடலில் மூழ்க வைக்கிறான்..!!
மழை போல தான் அவன்,
அரிதாய் தான் வருவான் என்றாலும் கூட வரும்போதெல்லாம் அனைத்து மகிழ்ச்சியை கொட்டி சோகங்கள் அனைத்தையும் எடுத்து செல்கிறான்..
மழை போல தான் அவன்,
இனி மழை நனைத்தாள் அவனும் நனைத்திடுவான் நினைவுகளால் முதல் சந்திப்பின் மண் வாசம் மனதுடன் மணக்க வைக்கிறான்..
மழை போல தான் அவன்,
இன்று மௌனமாய் உயிர் கொல்லும்  வலியாய் வாழ்ந்தாலும் என்றேனும் ஓர் நாள் என்மீதான பேரன்பை பெருமழையை  போல் கொட்டித்தீர்ப்பான்  என்றே காத்திருக்கிறேன்..!!

Trignometry

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
Rain

ulagathil ulla ella mukkiyamana thevaigalail miga mukkiyamanathu mazhai. kaaranam

Vivasayi ku thozhanai
varanda bhoomi ku neerai
thaagathir ku thanniyai uruvam eduthai.

unnai kudai pidithu othuki vittalum
unai kandu othungi nindraalum
engaluku nee epothum pola uthavi seithu konduthaan irukiraai!!

unnai vendaam endru sollum silar mazhai kaalathilum
unnai vendum endru sollum silar veyil kaalathilum
ek kaalam aayinum nee illamal uyirinam irukaathu!!

naangal unai maranthaalum
engalai nee maaraka maatai endru ariven

nee illlamal ulagathil entha jeevanum illai
nee illamal intha ulagam ulagam illai.

sila neram azha vaithai vellam ennum per kondu
aanal apothum manitham mukkiyam endru manithanuku puriyavaithai!!

"Valluvan kooriyathu pol neer indri amaiyathu ulagu"

Jeni

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +3/-0
    • View Profile
சத்தம் இல்லா மாலை நேரம்
வெளியில் அமர்ந்து வேடிக்கை பார்க்க
திடீரென வானம் கோபம் கொண்டது
நிமிர்ந்து பார்த்தேன் ,நீ மழை துளிகளை என் முகம் மீது தூறல் ஆக தெளித்தாய்
அப்படியே கீழே தரையில் பார்த்தேன்
கண்ணாடி போல் நீர் துளிகள் உடைந்து கண் சிமிட்டும் நேரத்தில் மாயமானது
என் வீட்டு ரோஜா பூ ஆனந்தத்தில் பூத்து வானத்தை பார்த்து தலையை ஆட்டி நன்றி கூறியது
சிறு பிள்ளைகள் கப்பல் செய்து தேங்கி நிற்கும் நீரில் விட்டு மகிழ்ந்தனர்
விவசாயிகள் அனைவரும் மகிழ்ந்து இயற்கை தாய்க்கு நன்றி தெரிவித்தனர்
வானமே நீ எப்போதுமே கோபம் கொள் அப்போது தான் மழையாக பூமியில் பொழிந்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
நீ அன்பாக இருந்தால் தூறல்கள் ஆகா வருவாய் தேவையை பூர்த்தி செய்ய நினைத்தால் சினம் கொண்டு மேகங்கள் கிழிந்த போல மழையை கொட்டி தீர்ப்பாய்
நீ எப்படி பூமியில் வந்தாலும் உன்னை கொண்டாட நாங்கள் இருப்போம்
எப்போது நீ மீண்டும் வருவாய் என காத்திருக்கும் உன் ரசிகை ❤️
Jeni