~மழையும் அவனும்~
மழை வரும்போதெல்லாம் அவன் ஞாபகங்கள் முந்தி கொண்டு வருகின்றது..
மழை போல தான் அவன்,
பேசும் சொற்களே சங்கீதம் ஆவதும், கண்களை ஊடுருவி பார்க்கும் பார்வையும், மழையினுடன் வரும் தென்றலும், எதிர்பாராமல் வரும் மின்னலும் ஒன்று தான்..
மழை போல தான் அவன், ஆசையாய் நனைத்து விடுகிறான் , பாசமாய் துவட்டி விடுகிறான், மோசமாய் என்னை நனைத்து விட்டாலும் மோகமாய் என்னை அணைத்தும் கொள்கிறான்...
மழை போல தான் அவன்,
அவனாகவே வருகிறான்
அவனாகவே செல்கிறான்..
எப்போது வருவான் என்று தெரியவில்லை, சில நாட்கள் தொடர்ந்து வருகின்றான், சில நாட்கள் விட்டு விட்டு வருகின்றான், சில நாட்கள் வருவது போல் போக்கு காட்டி விட்டு வராமல் சென்று விடுகிறான்..
சில நேரங்களில் சில்லலென்று காற்றடிப்பது போல, அவன் பூ முகத்தை மட்டும் காட்டி மனத்துக்குள் சந்தோசம் தோன்றும் முன்னே அதை பறித்தும் சென்று விடுகிறான் ..!!
மழை போல தான் அவன்,
எதிர்பார்த்து காத்திருந்த போதெல்லாம் வராமல் பாலை நிலம்போல தவிக்கவிட்டு,நினைக்காத நேரத்தில் அன்பு கடலில் மூழ்க வைக்கிறான்..!!
மழை போல தான் அவன்,
அரிதாய் தான் வருவான் என்றாலும் கூட வரும்போதெல்லாம் அனைத்து மகிழ்ச்சியை கொட்டி சோகங்கள் அனைத்தையும் எடுத்து செல்கிறான்..
மழை போல தான் அவன்,
இனி மழை நனைத்தாள் அவனும் நனைத்திடுவான் நினைவுகளால் முதல் சந்திப்பின் மண் வாசம் மனதுடன் மணக்க வைக்கிறான்..
மழை போல தான் அவன்,
இன்று மௌனமாய் உயிர் கொல்லும் வலியாய் வாழ்ந்தாலும் என்றேனும் ஓர் நாள் என்மீதான பேரன்பை பெருமழையை போல் கொட்டித்தீர்ப்பான் என்றே காத்திருக்கிறேன்..!!