Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 01✨  (Read 1512 times)

thamizhinichat

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 10
  • Reactions: +0/-0
  • ꧁༒🦋ANNA&PAPA🦋༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐✨
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐✨
✨SEASON 01✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
✨ மீள முடியா அழகான தருணங்களை, நமக்களிப்பது என்றுமே நட்புதான்!

கண்கள் பார்த்து சிரித்தே, ஆயிரம் கதைகள் பேசுவோம், கைப் பிடித்து நடந்து சென்று, உலகை ஆண்டுவிட்டது போல், உவகை கொள்வோம்

கொட்டிக் கிடக்கும் சந்தோசத்தின் நடுவில், கொஞ்சமாக சண்டைகளும் இருக்கும்!

மகிழ்ச்சியில் பின் நின்றும் துன்பத்தில் முன் நின்றும் என்னை உத்வேகம் செய்து வலி நடத்தினாய்

என் சோகத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் செய்ய உன் தோல்கள் சோர்ந்ததே இல்லை

பாந்தோடும் நதியில் மீன்கள் எதிர்த்து சென்று இலக்கை அடையும் நட்பே நானும் அவ்வரத்தை கேட்கிறேன் விரைந்து செல்லும் காலத்தை பின் நீந்தி சென்று உன்னோடு மகிழ்ந்த காலத்தை மீண்டும் அடைய

இன்று சந்திக்க முடியா தொலைவிலிருந்தும், என்றும் நம் நட்பின் தூரம் பக்கமே

பழகிய நாட்களும், பகிர்ந்த நிகழ்வுகளும், கொண்டாடிய தருணங்களும், தோள் கொடுத்த நிமிடங்களும், கண்ணீர் துடைத்த கரங்களும், திரும்பி வர ஏங்குகிறேன்! ✨

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 25
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
இப்படத்தை பார்த்ததும் மனதில் தோன்றியது..........
இன்னுயிர் எடுக்கும் என்னுயிர் தோழி

உலகில் சுயநலமற்ற உயிர் தாய் ஒன்று தான்
உண்மைதான் .....
எனது தோழியை காணும் வரை ....
ஏனென்றால்...
என் கண்ணசைவிலே
நான் காணும்வற்றை கனபொழுதில்
கண்டறிந்தவள் நீ..
உன் நட்பினால் இருமடங்காகிய
இன்பங்களும் உண்டு..
துடைத்தெறியப்பட்ட துன்பங்களும் உண்டு....
தாயிடம் கூறாதவற்றை
உன்னிடம் கூறியதுண்டு
என் குமுறல்களுக்கு
செவிமடுத்த
என்னுயிர் தோழிகளின்
செவியில்
இனிய கவிதையாய்....இதோ

Manmadhan

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +1/-0
    • View Profile
இந்த பதிவினை பார்த்தவுடன்
என் மனதில் தோன்றியது

சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்
வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்.
ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்.
நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.
நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.
தேடலின் உருவங்கள் இணையும் என்றே…
இயற்கை எழுதியதோ…
தேடலின் பயணங்கள் இணையும் என்றே…
இதயங்கள் எழுதியதோ
நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக்க முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.
நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்.
« Last Edit: September 01, 2023, 11:55:29 am by thamizhinichat »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨இக்கவி என் ஆறுயிர் நண்பனுக்கு உரியது✨
சந்தோசத்தின் மறு பக்கம்
நாம் பயின்ற பள்ளி காலம் மட்டும்...
ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும்
 வாங்க முடியாத காலம் அது..!
இன்பம் துன்பம் இரண்டும் கலந்த காலம் அது ...
காலையில் இன்பத்துடன் ஆரம்பித்து
உச்சிகால நேரத்தில் துன்பத்திலும் துவண்டு..
மாலையில் மலர்ந்திடும் மல்லி போல்
சந்தோஷ புன்னகை பூத்திடும் காலம் அது..!
இன்றும் நம் ஒவ்வொரு நெஞ்சங்களிலும்
  மீண்டும் அந்த காலம் வாராத என
எண்ணி தவிக்கும் காலம் பள்ளிக்காலம்..!
வெண்ணையை திருடி உண்ட கண்ணன் கூட
என் நண்பனின் உணவு
நான் உண்டதை கண்டு
வியந்த காலம் பள்ளி காலம்...
இன்றும் என் தவறினை ஏற்க மறுக்கும் என் மனம்..
அன்று என் நண்பனின் தவறை கூட
என் தவறு என்று என்று நெஞ்சை நிமித்தி சொன்ன காலம் பள்ளி காலம்..!
இன்று ஆயிரம் காதல் கவிதைகள் கிறுக்கி இருந்தாலும்...
அன்று என் நண்பனின் காதலுக்கு
 நான் எழுதிய முதல் கவியில் மலர்ந்த சந்தோச புன்னகை
இன்றும் என் நெஞ்சில் உதிராமல் இருக்கிற காலம் பள்ளிக்காலம்..!
பாற்கடலில் விளையும்  அமுதத்தில் கலப்படம் உண்டு
நாம் பழகிய பள்ளி பருவ காலத்திலோ ..!
நம் நெஞ்சிலோ ஒரு சிறு துளி கள்ளம் கூட இல்லையே ..!
இலக்கணம் பயிலும் வயதினில
தூய்மையை கற்று கொண்ட காலம் பள்ளி பருவ காலம் ..!
அப்பள்ளி பருவ காலத்தில்மலர்ந்த
நம் நட்பினத்தூய்மையைய் காண்பதற்கு
 தேவர் கூட்டம் வானில் இருந்து பூலோகம்  வந்தாரோ ....
என் ஆருயிரே நண்பா அருள்
« Last Edit: September 01, 2023, 02:50:02 pm by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
இலக்கணத்திற்கே அழகு ஊட்டிய சொல் நட்பு என்னும் சொல்.
நட்பு என்னும் சொல் எவ்ளோவு இனிமையோ
அது போல் நாம் தோழன் தோழிகளுடன்
பழகும் தருணம் கூட இனிமைதான்....
சப்தங்களை சுமந்து செல்கின்றது காற்று என்பார்கள்...
ஆனால் எங்களின் சிரிப்பொலியையும்
நட்பின் கேளிக்கையும்...
சுமந்து செல்ல காற்றுக்குக்கூட பலம் இல்லை...
என்று நம் நட்பிடமே சரணாடைந்து யாசிக்கின்றன!
ஆண் பெண் என பேதம் பாக்காமல்....
பழக்கமுடியும் என்றால் அது நம் நட்பால் மட்டுமே முடியும்...
நட்பில் என்றும் எதிர்பார்ப்பும் இல்லை,
ஏமாற்றமும் இல்லை....
போட்டி பொறாமை என்றும் நட்பில் இல்லை...
 நண்பர்களிடம் நடிக்க தேவை இல்லை....
 சந்தோஷத்தை முதலில் பெற்றோர்களிடம் பகிர்ந்து பெருமை படுவோம்!
ஆனால் நம் வாழ்வில் துன்பம் என்று ஒன்று வந்தால்...
 மனம் முதலில் தேடுவது உயிர் நண்பர்களின் தோள்களை தான்.
« Last Edit: September 01, 2023, 02:49:34 pm by Maari »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
விளையாட்டுக்காகவேனும் எண்ணாதே...
நாம் பிரிந்து விட்டோமோ என்று...

பிடிக்காவிட்டால் பிரிந்து போக
நம் நட்பு ஒன்றும் காதலோ, கல்யாணமோ இல்லை....
நட்பு....
இதில்... பிரிவென்ற சொல்லே என்றும் இல்லை..

நம் உள்ளத்தின் உணர்வுக்கலப்பில் பிறந்த பிள்ளைதான் நம் நட்பு..
காதலியை பிடிக்காமல் போகும்...
காதலனை பிடிக்காமல் போகும்...
மனைவியை பிடிக்காமல் போகும்...
கணவனை பிடிக்காமல் போகும்...
பிள்ளையை பிடிக்காமல் போகுமா...?

நம் நட்பு என்னும் கண்ணாடியில் என் பிம்பம் நீ...
உன் முகத்தில்  வெறுப்பு என்னும்  வேஷம் நீ காட்டினாலும்..
உன் கண்களில் நம் நட்பை நான் கண்டு கொள்வேன்....
அது வெறுப்பில்லை வெறும் கோபம் தான் என்பதையும்  நானறிவேன்...
நீ கோபித்தாலும் நானாக பேசவேண்டும் என்ற உன் ஏக்கத்தையும் நான் உணர்வேன் ....
உன் ஏக்கத்தை ரசித்து கொண்டே...உன்னை எதிர்பார்த்து காத்திருப்பேன்... உன்னோடு பேச..
நம் நட்பின் பாதையில்........


போதும் விளையாட்டு... உன் தவிப்பும் என்னை தவிக்க வைக்கிறது..
வேஷம் கலைத்து வா...நேசம் அழைத்து வா..

நம் நட்பு இன்னும் நெடுந்துரம் போக வேண்டி இருக்கிறது....
« Last Edit: August 31, 2023, 08:03:31 am by Maari »

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
நண்பர்களே -
நம்மை சிரிக்க வைக்கும்...
ஒரு வார்த்தை 😊😊நட்பு
நம் வாழ்க்கையை வண்ணமயமாக்கும்..✨✨
ஒவ்வொரு நிமிடமும்...
மிகவும் அற்புதமாக இருக்கும்..😍
நட்பு நம் முகத்தில்.....
புது பொலிவை தருகிறது..😍😍
ஒளிவான வானவில் போல.. 🌈🌈
எல்லையற்ற புள்ளிகள்....
ஒரு வட்டத்தை உருவாக்குகிறது..⭕
நண்பர்களுடன் நாம் பல...
அற்புதங்களை அனுபவிக்கிறோம்..😇😇
 இறுதியாக,
நட்பு எப்போதும்...
உண்மையாக இருக்க வேண்டும்..🙌
ஒரு சுவையான காபி ப்ரூ போல..😝😝
« Last Edit: September 01, 2023, 11:53:32 am by thamizhinichat »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
கருவறைக்குள் அன்னையையும் என்னையும் இணைப்பது
தொப்புள் கொடி போல
உன்னையும் என்னையும் வகுப்பறை முதல் கல்லறை வரை
இணைப்பது தோழமை என்னும் நட்புக்கொடி....

இந்த கொடி நம்பிக்கை என்னும் வேரையும்
தன்னம்பிக்கை என்னும் இலையையும் கொண்டது…

நிறம் பார்க்கும் குணம் இல்லை...
திறம் பார்க்கும் பழக்கம் இல்லை...
மனம் மற்றுமே பார்க்கும் மகத்தான உறவு நட்பு...
காதலில் கூட பாலினம் பாகுபாடு உள்ளது...
ஆனால் நட்புக்கு பாலினம் கிடையாது...
மனிதனாய் பிறந்த அனைவரும் ஒரே அமிர்தம்
நட்பு…
காதல் கடந்தால் காதலர்கள் நண்பர்கள் ஆவார்கள்..
ஆனால் நட்பில் கசந்தால் காதலர்கள் ஆவதில்லை...
நான்கு நொடி பேச்சில் தொடங்கும் நட்பு...
நாடி அடங்கும் வரை அழிவதில்லை மனதில்
என்றும்…..!
உங்களில் ஒருவன்
நான் உங்கள் தோழன்....
WTC MamaKutty
« Last Edit: September 01, 2023, 02:23:18 pm by thamizhinichat »