Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐💥SEASON 14💫  (Read 1307 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 14💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
            "நிலா , நிலவு என்னும் பெண்"



சித்திரையில் முத்திரை தரும்..
முகத்திரையிலா முழுமதியே...
பெண்ணின் அன்னைத்து பருவத்தையும் கொண்ட நிலா  என்னும் நிலவே !!!

மென்மையை உவமையாக சொல்வதற்கே மிகவும்   நீயே பொருதமாவாய்.!
பன்முகமும் தந்து விட்டாயே நீ பாவலர்க்கு நிலாப்பெண்ணாய் ! வெண்மதியாய் !!  பௌர்ணமியாய் !!! முழுநிலவாய் !!!!

அனைத்துலகக் கவிஞரெலாம் அடிமையன்றோ உன்மடியில்.!
நினைவாற்றல் தந்திடுவாய் நிலாக்கால நினைவுகளாய்.!
நினைவெல்லாம் நிறைந்திடுவாள் நிலவை அனுதினமும் நீ நேசித்தால்.!
வினையில்லாச் சிந்தனைகள் வீழ்ந்து புது புது கவிதையாகும்.!

மொட்டை மாடியில்  வெட்டை வெளியில் கருமை சூழுந்த இரவில் 
பெருமையுடன் அமர்ந்து கருமையான மேகத்தின்  உள்ளே  மறைந்து மறைந்து
வரும் வெள்ளை நிலா.

உன்னை ரசித்து  கொண்டே அவளைத் தேடி கண்கள் அலைமோத..
என்னை விழி முடும்பொது  எல்லாம்..
👀கருப்பு வெள்ளை நிலா அவள் கண்கள் என் கண் முன்னே வந்து போகிறது.
👁️👁️வெள்ளை வானத்தில் இருகரு நிலாக்கள் அவள் கண்களில் விழியாக…!!

நிலாக்காலத்தில் வீதியுலா வரும் அழகின் அழகே !!!
இரு பிறைகள் கொண்ட முழுமதியே !!!
தேய்பிறை வளர்பிறை இல்லா பவுர்ணமியே !!!


பவுர்ணமி நிலவே உன்னை கண்டால் !!!
இதய காயம் ஆறும் !!! மனசில் காதல் பெருகும் !!!!
மௌன காதல் மொழி பாடி !!! காற்றில் ஆட தோன்றும்...!!!

அன்னாந்து வானம் பார்த்தவர்களிடையே நான் மட்டும்
என் நிலா முகம் மட்டும் பார்த்து இரு நிலா கண்டான் நிலா ரசிகன் நான்

உங்கள் ❤️ MurrattuKaalai❤️ @ 🫰Mr. DON🫰



« Last Edit: February 21, 2024, 02:54:52 pm by Jackey pondiyan »
♥️Murrattu kaalai♥️

Jeni

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +3/-0
    • View Profile
என்  இயற்கை காதலி !

உனக்கு பல பெயர்கள் இருக்குதடி...வெண்ணிலா முழு நிலா ௭ன பல செல்ல பெயர்கள் ..
ஆனால் எனக்கு நீ என்றும் இயற்கை காதலி !
பால் நிறம் கொண்ட பஞ்சு போல குளுமை கொண்ட அழகியே  நான் உன் அடிமையடி
என் நெஞ்சில் பாரம் சுமக்கும் போது...உன்னை கண்டு கொண்டே மொட்டை மாடியில் படுத்து பார்த்து நீ௧்குவேன்
உன் கொள்ளை அழகை கண்டால் யாருக்கு தான் மனம் மகிழ்ந்து இருக்காது
ஒரு ஆயிரம் பெண்கள் நின்றாலும் உன் போல் அழகு இல்லையடி
அத்துனை அழகு கொண்டு இரவில் எட்டி பார்க்கிறாய்
உன் மேல் உள்ள திருஷ்டி தீர்க்க என்ன தான் செய்வது
சிறு வயதில் நான் நடக்கும் போது பி‌ன் தொடரு௧ிறாய் என்று என் அம்மாவிடம் கூறினேன் !
அவள் என்னை பார்த்து சிரிப்பாள்
இப்போது புரிகின்றது அழகியே ...நீ என்னை தொடரவில்லை
நாங்கள் தான் உன் அழகில் கண்ணை சிமிட்டாமல் உன்னை ரசித்து பி‌ன் தொடர்கிரோம்
முழு நிலவாக ஜொலிக்கும்  நீ.. திடீர் என்று பிறை நிலவாய் மாறுகிறாய்
தென்றல் உன் மேல் பட்டு மேகத்தில் ஒலிந்து  என்னோடு விளையாடு௧ிராய்
அலை பேசியில் காதலன் ஓடு பேசிகொண்டு இருந்தாலும்
உன் அழகில் என்னை மயக்கி ஒரு நொடி உன்னை காண வைக்கிறாய்
ஒரு நா‌ள் கண்ணாடியில் உன்னை காண்பிக்க வேண்டும் என்று கிறுக்கு தனம் ஆக சிந்திக்கிரேன்
அப்போது ஆவது உன் அழகு உனக்கு தெரியும் அல்லவா
உன்னை வெகு தூரம் இருந்து ரசிக்கும் ஒரு இயற்கை காதலி தான் எப்போதுமே
என் ரசனை என்றும் நிறுத்த மாட்டேன் என் இயற்கை காதலியே .....!
[/color]
« Last Edit: February 21, 2024, 01:47:35 pm by Jeni »
Jeni

WTC SilK

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
நிலா என்னும் காதலி
நிலவினை பற்றி வர்ணிக்க ஆயிரம் உவமை இருந்தாலும் என்னுள் என்றும் காதலி ஆன நிலவை என் காதலால் வர்ணிப்பது தான் முறையோ!!!!!
     ஏனென்றால் அவளும் ஒரு பெண் தானே வெட்கப்படும்பொழுது பெண்களின் முகம் சிவக்கும் என அறிந்த நான் உன் வெட்கத்தில் வெண்மையைக் கண்டு மென்மையானேனடி!!!
      உன் பார்வையின் வெளிச்சம் பட்டால் பல நோய்கள் பறந்தோடும் என்கிறது அறிவியலின் ஆய்வு அவர்களுக்கு என்ன தெரியும் என் உடலே உன் பார்வையால் மட்டுமே நிறைந்திருக்கும் அனிச்சம் பூ என்று!!!!!!
       ஊரே உறக்கத்தில் அடங்கி போய் இருக்கும் நேரத்தில் நீ மட்டும் உறங்காமல் உழவுகின்ற மாயம் என்ன என்னை வந்தடைய நீயும் என்னை தேடுகின்றாயோ உன் காதலனாய்!!!!
      நீ வராத அந்த மூன்று நாள் உன் மாதக் கணக்கில் மாதவிலக்காக ஆகின்றதோ என்னவளின் வலியை எவ்வாறு பொறுத்துக் கொள்வேன் நானும் அவ்வுண்டு நாளும் விரதம் என்னும் பெயரில் உனக்காக தனித்திருக்கிறேன்
      கால்கள் இல்லாமல் நீ நடையிட்டு வரும் ஓசை என் உள்ளுக்குள் ஊறுகின்றது என்னை தேடி நீ வந்து விட்டாய் என்று!!!!!
      உன் ஆடையான மெல்லிய கரு மேகங்கள் கூட நடுநிசியில் உள்ள அழகினை மறைக்க வைக்கப்பட்டு அதுவும் கலந்தன காற்றில் கரைந்தன!!!!!
      நடுநிசி நேரத்தில் நிலவின் முழு அழகினை காண என்னவரம் பெற்றேன் என்னவளின் இந்த அழகைக் காண!!!!
       கண்மூடி உன் மடியில் நான் துயில நீ தாலாட்டு பாடிய என்னை உறங்க வைத்து எங்கு சென்றாய் நாளை நீ வருவாய் என்ற எண்ணத்தில் என் இதயம் துடிக்க உனக்காக காத்திருக்கின்றேன் இந்தப் பகலும் அந்த மூன்று இரவும்!!!!!
உன் கட்டுடல் முற்றுடன் அதிராமல் களையாடி மதியெங்கும் கவி சேர்க்கிறேன்!!!!!
      இப்படிக்கு உன் காதலனான நடுநிசி நாயகன்

LOVELY QUEEN

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 14
  • Reactions: +4/-0
    • View Profile

மந்திர மதியே..
நீயே என்னவன்..

உனை பார்த்து
இதயம் தொலைத்த
ஓராயிரம் கோடியில்
நானும் ஒருத்தி..

பால் சிந்தும்
பட்டுப் போன்ற
வட்ட முகம்...

என் இருள் உலகு
வெளிச்சமாவது
உன் வண்ணத் திருமேனியின்
வாஞ்சை மிகு ஒளியே!!

நீ என்னைச் சுற்றி வருகிறாய்
நானோ உன் நினைவில் தடுமாறி
என்னையே சுற்றிக் கொண்டிருக்கிறேன்!!

என்னை உயிர்ப்போடு
வைத்திருப்பது
உன் ஈர்ப்பு விசை மட்டுமே...

என் மீது உனக்கென்ன கோபமோ??
என்னை விட்டு தூரமாகவே செல்கிறாய்..
உன் பிரிவின் தூரம்
கூடக் கூட
என் ஒட்டு மொத்த உலகின் உயிர்ப்புமே
அழியத் தொடங்குகிறது..

உன்னை தூரமாக இருந்து பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டும் என்பதே
என் வாழ்வின்
விதியானாலும் அதை
மனதார ஏற்றுக் கொள்கிறேன்...

என் இளமதியே
என்றும் உன் ஈர்ப்பு விசைக்காக
ஏங்கும் உன் உலகம் இவள்...
கனவுக் காதலி Lovely Queen...
« Last Edit: February 25, 2024, 10:51:43 am by LOVELY QUEEN »

Chuttie Ponnu

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 2
  • Reactions: +1/-0
    • View Profile
கடவுள் எழுதிய முதல் கவிதை...... நிலா!!!!

ஆகாயத்திற்கு அழகு நீ..! அதிசயத்தில் ஒன்று நீ..! சேதாரம் இல்லாத சொக்கதங்கமாய்   கவிஞர்களுக்கு கிடைத்த கற்பனை சுரங்கம் நீ. ...!

எட்டாத உயரத்தில்  இருந்தாலும் அனைவரது எண்ணங்களையும் எட்டி பிடிக்க வைப்பது நீ....!

மாடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்! தெருக்கோடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய் நீ....!

ஆகாய சமஸ்தானத்தில் இரவை ஆளும் அரசி நீ...!

ஆகாயம் இருந்து கீழே இறங்கி வந்தாள் ... ஆண்களையும் காதல் வசபடுதுவாய்.... பெண்களையும் பொறாமைகொள்ள வைக்கும் பேரழகி நீ....!

ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியிலும்,பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் நீ...!

காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ நீ...!

சிலநாள் இருளாக... சிலநாள் வெளிச்சமாக... சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ...!

அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே  பாங்குடனே  தான் பறந்து  வந்தாயோ? நீ...!

வண்ணம் இல்லாமல் வானில் வரைந்த சித்திரமாக, வாடாத மலராக இரவு வானில் உலாவருவதும் நீ...!

ஆம்... நிலா ஓரு பெண் தான்....!

மூக்கும் இல்லை முழியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா…
நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே  வான் வீதி உலா வருபவள் நீ...!

தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க வந்தவளும் நீ...!

சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்யும் பிம்ப வடிவம் நீ...!

உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளோ நீ...!

பகல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க ..இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காக்க வந்தது நீ...!

இவ்வளவு அம்சம் கொண்ட நிலாவை வானதிலேயே  தங்கவைத்து அனைவரையும் ஏங்கவைத்த  கடவுளும் கள்நெஞ்சகாரனே....

விண்ணை தாண்டி மண்ணில் வருவாயா...!

 நானும் பாடுகிறேன்...
நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா....!🦋

 

WTC SilK

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
கடவுள் எழுதிய முதல் கவிதை...... நிலா!!!!

ஆகாயத்திற்கு அழகு நீ..! அதிசயத்தில் ஒன்று நீ..! சேதாரம் இல்லாத சொக்கதங்கமாய்   கவிஞர்2
நிலா என்னும் காதலி
நிலவினை பற்றி வர்ணிக்க ஆயிரம் உவமை இருந்தாலும் என்னுள் என்றும் காதலி ஆன நிலவை என் காதலால் வர்ணிப்பது தான் முறையோ!!!!!
     ஏனென்றால் அவளும் ஒரு பெண் தானே வெட்கப்படும்பொழுது பெண்களின் முகம் சிவக்கும் என அறிந்த நான் உன் வெட்கத்தில் வெண்மையைக் கண்டு மென்மையானேனடி!!!
      உன் பார்வையின் வெளிச்சம் பட்டால் பல நோய்கள் பறந்தோடும் என்கிறது அறிவியலின் ஆய்வு அவர்களுக்கு என்ன தெரியும் என் உடலே உன் பார்வையால் மட்டுமே நிறைந்திருக்கும் அனிச்சம் பூ என்று!!!!!!
       ஊரே உறக்கத்தில் அடங்கி போய் இருக்கும் நேரத்தில் நீ மட்டும் உறங்காமல் உழவுகின்ற மாயம் என்ன என்னை வந்தடைய நீயும் என்னை தேடுகின்றாயோ உன் காதலால்!!!!
      நீ வராத அந்த மூன்று நாள் உன் மாதக் கணக்கில் மாதவிலக்காக ஆகின்றதோ என்னவளின் வலியை எவ்வாறு பொறுத்துக் கொள்வேன் நானும் அந்த மூன்று நாளும் விரதம் என்னும் பெயரில் உனக்காக தனித்திருக்கிறேன்
      கால்கள் இல்லாமல் நீ நடையிட்டு வரும் ஓசை என் உள்ளுக்குள் ஊறுகின்றது என்னை தேடி நீ வந்து விட்டாய் என்று!!!!!
      உன் ஆடையான மெல்லிய கரு மேகங்கள் கூட நடுநிசியில் உள்ள அழகினை மறைக்க வெட்கப்பட்டு ஆடை கலைந்தன காற்றில் கரைந்தன!!!!!
      நடுநிசி நேரத்தில் நிலவின் முழு அழகினை காண என்னவரம் பெற்றேன் என்னவளின் இந்த அழகைக் காண!!!!
       கண்மூடி உன் மடியில் நான் துயில நீ தாலாட்டு பாடிய என்னை உறங்க வைத்து எங்கு சென்றாய் நாளை நீ வருவாய் என்ற எண்ணத்தில் என் இதயம் துடிக்க உனக்காக காத்திருக்கின்றேன் இந்தப் பகலும் அந்த மூன்று இரவும்!!!!!
உன் கட்டுடல் மொட்டுடன் அதிராமல் களையாடி மதியெங்கும் கவி சேர்க்கிறேன்!!!!!
      இப்படிக்கு உன் காதலனான நடுநிசி நாயகன்
களுக்கு கிடைத்த கற்பனை சுரங்கம் நீ. ...!

எட்டாத உயரத்தில்  இருந்தாலும் அனைவரது எண்ணங்களையும் எட்டி பிடிக்க வைப்பது நீ....!

மாடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்! தெருக்கோடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய் நீ....!

ஆகாய சமஸ்தானத்தில் இரவை ஆளும் அரசி நீ...!

ஆகாயம் இருந்து கீழே இறங்கி வந்தாள் ... ஆண்களையும் காதல் வசபடுதுவாய்.... பெண்களையும் பொறாமைகொள்ள வைக்கும் பேரழகி நீ....!

ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியிலும்,பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் நீ...!

காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ நீ...!

சிலநாள் இருளாக... சிலநாள் வெளிச்சமாக... சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ...!

அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே  பாங்குடனே  தான் பறந்து  வந்தாயோ? நீ...!

வண்ணம் இல்லாமல் வானில் வரைந்த சித்திரமாக, வாடாத மலராக இரவு வானில் உலாவருவதும் நீ...!

ஆம்... நிலா ஓரு பெண் தான்....!

மூக்கும் இல்லை முழியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா…
நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே  வான் வீதி உலா வருபவள் நீ...!

தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க வந்தவளும் நீ...!

சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்யும் பிம்ப வடிவம் நீ...!

உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளோ நீ...!

பகல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க ..இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காக்க வந்தது நீ...!

இவ்வளவு அம்சம் கொண்ட நிலாவை வானதிலேயே  தங்கவைத்து அனைவரையும் ஏங்கவைத்த  கடவுளும் கள்நெஞ்சகாரனே....

விண்ணை தாண்டி மண்ணில் வருவாயா...!

 நானும் பாடுகிறேன்...
நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா....!🦋

  [/color][/size][/glow][/b]

Ashwin_

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
    • View Profile
நிலா
என் வாழ்வின் பக்கங்களில் அழிக்க முடியாத ஒரு பெயர் - நிலா

குழந்தைப் பருவத்தில்...

அன்னை மடியில்
அழுத நிலையில்
கண்கள் கதறி
கன்னங்கள் சிவந்து
உண்ண மறுத்து
உணவை வெறுத்து
நான் செய்த நாடகங்கள்

உன்னைக் காட்டி
எந்தன் பாட்டி
நிலாச்சோறு ஊட்டி
தோள்மீது சாய்த்து
நித்திரையில் ஆழ்த்திய
அவ்வினிய நினைவுகள்

இளமைப் பருவத்தில்...

புத்தகம் ஏந்தி
பள்ளி புதுந்து
குறும்புகள் குறைந்து
குணங்கள் மாறி
நட்புகள் தோன்றி
வண்ணங்கள் பூட்டி
வாழ்க்கையின் கோணங்கள் மாறிய நாட்கள்

உன் ஒளியிலே பயின்று
உன்னுறவிலே மகிழ்ந்து
உன் தரிசனம் வேண்டி
காத்திருந்த தருணங்கள்

மங்கையாய் நான் மாறி
என் நளினங்களது கூடி
ஒவ்வோர் திங்களும்
வளர்ந்து, தேய்ந்து
நிலவாய் மெருகேறி
தோழியாய் உனை பாவித்து
உன்னோடு பகிர்ந்த கதைகள்
என் நெஞ்சில் இனிக்குதடி

காதல் பருவத்தில்...

"நெஞ்சணையில் அவன் இருக்க
பஞ்சணையில் இவள் உடலிருக்க
துயிலோ துன்பத்திலிருக்க
உயிரோ ஊஞ்சல் ஆடுதடி "
என காதலால் கவிதை எழுதி
உன்னுடன் வாசித்த கணங்கள்

"உனது வெளிச்சத்தில்
தலைவன் நெருக்கத்தில்
நாணம் என் அகத்தில்
மனமோ விண்ணகத்தில்
உலகம் கைவசத்தில்"
என்று உலவிய காலங்கள்

முதுமைப் பருவத்தில்...

மொட்டைமாடி மேலே
உன்னொளியின் கீழே
தலைவனின் மார்மீது
பல்போன பின்னாலும்
பழங்கால கதைபேசி
நரைகூடிப் போனாலும்
மனதாலே மழலையாய்
நானாகி போகின்றேன்

சந்ததிகள் கோடி கண்டும்
இளமை மாறா வடிவம் நீ
குழந்தைக்குப் பதுமைநீ
மங்கைக்குத் தோழி நீ
ஆணுக்குக் காதலி நீ
முதுமையில் தாயும் நீ
என்றும் அழியா ஞாபகம் நீ!!                                              டெடிகேட் டு நிலா மாறி இருக்கும் என்றும் என் மணத்தில் வாழும் பிரியங்கா டீச்சர் ❣💞
« Last Edit: February 29, 2024, 02:03:48 am by Ashwin_ »

Charlotte

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +2/-0
    • View Profile
இரவின் வெளிச்சம் நீ...
இருளின் சூரியன் நீ...
இயற்கையின் அழகு நீ...
இனிமையின் இரவும் நீ...

காதலின் ராகம் நீ...
கவிஞனின் ரசிகன் நீ...
கனவுகளின் கூடாரம் நீ....
கயவனின் காட்சியும் நீ...

தாயின் நம்பிக்கை நீ...
குழந்தையின் சிரிப்பும் நீ...
தனிமையின் நண்பன் நீ...
தலைவனின் காவலனும் நீ...

சோகத்தில் ஆறுதல் நீ...
சொந்தத்தில் உயிரும் நீ...
தேடலின் சுகமும் நீ...
தேடிய தேவதையும் நீ...

வாழ்வின் சுமையும் நீ...
அதை ஆற்றும் மருந்தும் நீ...
வெள்ளை மனமும் நீ...
கொள்ளை அழகும் நீ...

மனதை மயக்கும் மாயாவி நீ... மண்ணில் விழும் சிறு புன்னகை நீ... மங்கையின் வெட்கம் நீ...
மனம் நிறைந்த அழகியும் நீ...

என் கவிதையின் வரிகள் நீ...
எனக்கு கிடைத்த வரமும் நீ...
என் கனவு காதலி நீ...
என்னை கொள்ளை கொண்ட கயவனும் நீ...

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
பூமியில் இருந்து பிரிந்த பகுதியாம்
ஆதவனை பிரதிபலிக்கும் இன்னொரு அழகு தேவதை நிலா…
இவள் மாதம் ஒரு முறை மாய்த்துகொல்வாளம்
எவ்வளவு இழந்தாலும் சோர்வாகமல் தன் செயலை
செம்மையாக செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்
அந்த ஊதா பூ…..வானில் இருக்கும் ஒத்த ரோஜா பூ
அவள் ஒருத்தி இல்லை என்றால் பூமியில் பருவகாலம்
இல்லையடி – அது போல என்னவள் இல்லை என்றால்
என்னில் இன்பம் துன்பம் இல்லை….
அவள் முழுமுகம் ஆனந்தமாய் ஆட்பரிக்கும் அழகி
அண்ணாந்து பார்க்கையில் ஆகாயம் ஜொலிக்கும்
அழகிய வட்ட முகம்… அது தான் அவள் செல்ல பெயர் பௌர்ணமி
ஆள் இருக்கும் இடம் தெரியாமல் போவாள்… இருள் சூழ்ந்த வானில்
எங்கே என்று தேடுவேன் என் கவிதையை நிலா…
என் தேவதை நீயும் நிலவே….. ஏனெனில் உன் புன்னகையில் நான் ஜொலிப்பேன்…. நீ வருந்தினாள் நான் வாடி போவேன்..
என் மனது என்னும் வானில் இருள் சூழ்ந்து கொள்ளும்
என் வாழ்வில் இருளே இல்லாத பௌர்ணமி ஆக இருக்க நீ வேண்டும் என
காத்து இருக்கும் உன் கண்ணாலன்….
நிலாவே வா வா வா வா வா……..