Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 02✨  (Read 1565 times)

thamizhinichat

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 10
  • Reactions: +0/-0
  • ꧁༒🦋ANNA&PAPA🦋༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 02✨
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐Season 02✨
✨SEASON 02✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!
« Last Edit: September 18, 2023, 11:05:13 am by Maari »

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
இயற்கை கண்சிமிட்டும், இனம்புரியா வேளையில், காதோரம் வந்து முனு முனுக்கும், பறவைகளின் கீச்சொலியில், ஒளிந்து கிடக்கும் பசிக்கான அர்த்தங்கள்!

பசியிருந்தும், அவன் நினைவிலிருந்து மீள, சோம்பலுற்று இன்னும் கொஞ்சம் தூங்கி கொள்ள, திரும்பி கொள்கிறேன்!

நழுவாமல் தழுவும், அவன் கைகளிலிருந்து, தப்பிச் சென்று சிக்கிக் கொள்ளும், போதை காதல் அது!

என் தயவின்றி, உன்னால் என்ன செய்து விட முடியும்? என்ற மேலோங்கிய பார்வையில், தோற்று தான் போகின்றேன்!

நினைவான நினைவா அது? துரத்தி சென்று தோற்றாலும், தெவிட்டாது தினமேங்கும், நினைவுகளின் குவியலவன்!

உயிர் உருகும் மெய்யாக, எவருக்கும் ஒப்பற்ற, அவனின்றி கழிக்கும் வீணான விநாடிகள் கண்டு!

ஒப்பனையின்றி, முகம் அழகானது, மூழ்கடித்த அவன் நினைவுகளின் தாக்கத்தினால்.!

இந்த நொடி எழுந்து கொண்டேன், போதுமென்ற மனமின்றி, நாளும் கரைகிறதே, மறக்காத கணங்கள் தொடரட்டுமென்று!.
« Last Edit: September 08, 2023, 08:35:18 am by Aadhira »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
காதல் செய்யாத குருடன் தான் வருங்கால மனைவிக்கு
எழுதும் அன்பு கவிதை காதல் பற்றி இதோ உங்கள்
செவிகளுக்கு…….

எங்கும் காதல் எதிலும் காதல்..
அடி பெண்ணே உனை காணாமல் நான்
உன் மீது கொண்ட காதல் என்பது – இவ்வுலகில்
நீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவன்
நீ இன்றி நானில்லை என்றேன் உன் கள்வன் (கணவன்/காதலன்)
இரு மேகங்கள் உரசும் போது மின்னல் வரும்
உன் புருவங்கள் மேலேரினால் என்னுள் பூகம்பம் வரும்
ஏனெனில் என்னவள் உன் கோபம் அளவற்றது…
உன்னை கோவக்காரி என கூற வில்லை
கோவைப்பழ உதடு காரி….. கண்ணகி குணம் உடையாள் என்றேன்
அன்பில் நீயோ எனக்கு இன்னொரு அன்னை
அறியுரையில் நீ எனக்கு ஆசான் – உனை காணும் வரை
காதலை யான் அறியேன் கண்ட பின்பு காதலை யான் மறவேன்
வேலை பழுவில் வேதனை படும் போதெல்லாம் உன்
சாலையோர காத்திருப்பு வீடு திரும்பியதும் எனை
புத்துணர செய்யும்….
பூ தேடும் தேனீ போல உனை தேடும் ஆண் ஈ நான்
கடல் தேடும் ஆறு போல உன் இதழ் தேடும் கள்வன் நான்
பிள்ளைக்கு முதல் முத்தம் தாயுடையது அது போல
நான் தரும் முதல் முத்தம் உன்னுடையது அன்பே ஆருயிரே
என்றும் உனக்காக காத்திருக்கும் உன் அன்பானவன்
நானே உன் கண்ணாலன் – என் அன்பு காதலியே


காதல் பற்றி சொல்ல சொன்னால் காதலி பற்றி சொல்கிறான் என்று
கோபம் கொல்லாத்தீர் காதல் கடவுள் போன்றது.. வணங்க தான் முடியும் வர்ணித்தல் ஆகாது.... என் காதலை வணங்கினேன்
என் காதல் கடவுள் என் வருங்கால மனைவியே

இப்படிக்கு 1000 கோடி பேர்களில் ஒருவன் அடியன் தமிழன் நான் உங்கள் நண்பன்
JS Tamilan என்னும் WTC MAMAKUTTY
« Last Edit: September 07, 2023, 11:24:23 pm by Maari »

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
✨காதல் ஓர் இனிமையான நரகம்   

இவ்வுலகில் ஈருயிர் அவ்விரு உயிரும் ஓர் உயிர் தான் என நம்ப வைக்கும் விசித்திர மாயை...   

பெண் பார்க்கையில் சலனம் கொண்ட மனமோ உன் விழி தீண்டலின் பின் மறு பெண் பார்வையும் தவறென்று நினைத்து உன் விழிகளில் சிறைக்கொள்கிறது என் மனம்...

நீ வெக்கம் கொண்டு செய்த சிறு புன்னகை என்னுள் ஆயிரம் மின் வெட்டுகளை உணர்கின்றேன் உன் மடியில் தலை சாய்த்த நொடி சிறு பிள்ளையாய் மாறுகிறது என் மனம்...

 அரவணைப்பில் அன்னையையும் தோள்களில் தோழியையும் கண்டிப்பில் தகப்பனையும் கண்டேன்...
 
 என் மனம் என்ன வினை செய்தாய் என கேட்கிறது விடை தெரியாது தவிக்கிறேன்...


நீ விட்டுச்சென்ற நொடி முதல் பொருள் இல்லா சொல் ஆனேன் உன்  நினைவில் கடலில் விழுந்த காகிதம் ஆகிறேன் கரை சேர துடித்தும் உன் நினைவலைகள் உள்ளிழுத்து செல்கிறது...

உன் பிரிவில் தலை இழந்த பனை ஆகிறேன் வாழ வழியில்லை உதிர்கிறேன் துகளாக...  ✨
« Last Edit: September 07, 2023, 11:23:34 pm by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 25
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
என் சிறு விழி அசைவின் கோவம் கண்டு ....
என் ஒரு வரி பதிலில் ஆட்டம் கொள்வாள்... உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும்.. அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே....
வாழ்கையில் பல கொட்டி கிடந்தாலும்....
என்றும் என் வாழ்வின் பெரிய சொத்து.... அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை... கனவில் கண்ட அவளை கண்டேன் நிஜ வாழ்வில்...
 அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் தவம் கொண்டேனோ.....
 உன் கண் அசைவிலே என் ஐம்புலனும்களும் அடங்கி போயின......
அதனால என்னவோ ......
தூக்கம் மறந்தேன் துக்கம் மறந்தேன் ....
பசி மறந்தேன் ருசி மறந்தேன்....
 ஆனால் என்னவளை மறக்கவில்லை ....
யார் பாதத்தையும் தொடராத என் விழிகள் ...
வழி மறந்து உன் விழியை தொடர்கிறது.... இயற்பியலில் விளங்காத ஈர்ப்பு விசையும் ...
உன் விழிகளில் கற்று கொண்டேன் .....
என்னை ஈர்க்கும் வியாசையை உன் கண்கள்.. நியூட்டனும் உணர்த்திருப்பான்...
 உன் விழிகளின் ஈர்ப்பை ..
வாழ்வில் வெளிவர முடியாத உன் விழி சிறையில் அகப்பட்டு கொண்டேன்.....
 என் இமைகள் முடும் வரை.....
 உன் விழிகளில் வாசம் கொண்டிருப்பேன் ...
       ..........முற்று ......
எனக்கு பிடித்த ஜெயகாந்தனின் வரிகள்
ஒற்றைச் செருப்பு ஒன்று கிடக்கிறது.. இடமா வலமா எதுவும் தெரியவில்லை

குப்புறக் கிடந்து குமுறி அழுகிறது....

இணையைப் பிரிந்த இலக்கியச் சோகம்

இதற்கு மட்டும் இல்லையா என்ன...
[/b]
« Last Edit: September 09, 2023, 03:56:12 am by Sanjikun »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
உனக்காக காத்து இருக்கும் கனவு காதலி நெடும் தூரம் நீ இருந்தாலும் என் அருகில் நீ இருப்பது போல பிம்பம் கொண்டு நானும் உன்னோடு உறவாடுகிறேன்
நீ ஒரு வார்த்தை பேசினாலும் நான் உயிர் கொண்டு வழிவேன் நீ பேசாத அந்த ஒரு நொடி உயிர் நீத்து விடும் கொடுமை நான் உணர்கிறேன்
எனில் உன்னை நான் உணர்கிறேன் உன்னை பார்க்க நான் காத்துஇருக்கும் ஒரு நிமிடம் கூட ஒரு யுகம் என தோறும் ஆனாலும் வலிகளை தண்டி உனக்காக காத்து இருக்கும் கனவு காதலி என்று உனது ஒரு வரி என்றும் ராதை வரவுக்காக கிருஷ்ணன் என்று சொல்லுவது உண்டு ஆனால் இங்கு கிருஷ்ணன் வருகைக்காக ராதை காத்து இருக்கிறாள் அவனோடு உறவாட களவாட உருவம் இல்லா கனவு காதலி நித்தமும் தூங்கி எழுகையில் உன்னை நான் ரசித்தது உண்டு ஆனால் நீ தூங்குவது போல் நடித்து என்னை ரசிக்க வைத்து நீ மகிழிவாய் என்று உணரும் தருவாயில் நான் வெட்கம் கொண்டு உன்னில் கரைவேன்  நான் உன்னில் என்றும் நீங்கா கனவு காதலி
[/b]
« Last Edit: September 08, 2023, 08:06:30 pm by Radha »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
கவிதைக்கு அழகு ஊட்டியதே
என் காதலியை நான்
கவிதையில் வர்ணிக்கும் போது அல்லவா..!
உன்னை வர்ணிக்க
தமிழில் இருந்து
சில முத்து சொற்களை எடுத்து..
கவிதையாய் உன்னை
வர்ணிக்க வந்து உள்ளேன்…!
உலகயே வியக்க வைக்கும் பால் நிலா கூட ..
உன் கருவிழியின் அழகை கண்டு வியர்கின்றதே..!
கடல் கன்னியின் அழகை கண்டு
வியந்தவர் பலர் உண்டு …
ஆனால் உன் அழகையையே
கண்டு கடல் கன்னி வியந்தாள் அல்லாவா ..!
காட்டு சிறுக்கியின் முத்து போன்ற பேச்சில்
கிறங்கி போனது என் இதயம் அல்லவா ..!
நாம் தொலைவில் இருந்தாலும்
நாம் சேரும் நன்நாளை என்னி…
என் நெஞ்சமோ சொக்கிப்போனதே பூமகளே…!
 உன் நினைவில்
உன்னையே உலா வருகிறேன்
என் ராதையே…!
💃திமிரு பெண்ணு💕
« Last Edit: September 09, 2023, 05:05:02 am by Radha »

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
காதல் ❤️❤️...
ராதா கிருஷ்ணனை ஒத்த வார்த்தை..💙💙 காதல் என்பது நிலவு போன்றது...🌙 அனைவரும் அதை விரைவில் அனுபவிக்க விரும்புகிறார்கள்... 
இது ஒரு அதிசயம்... அந்த ஒருவரிடம் மட்டுமே நம் இதயம் சரணடைகிறது..   
காதல் மிகவும் நிபந்தனையற்றது..😍 அது எப்போதும் நித்தியமான உணர்வு..❣️
நம் இதயம் மலரும்  .. நம் அன்பின் புன்னகையால்..💕
இறுதியாக.. ஒரு இதயம் பற்றவைக்கிறது  .. அன்பின் சுடருடன்..💕
« Last Edit: September 10, 2023, 03:50:28 pm by Maari »

Fairy Princess

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
  • 🧡Princess Of Mr Villan🧡
    • View Profile
எனக்கு கவிதைலாம் எழுத வரது...
இருந்தாலும் எழுதுறேன்..!
இந்த கவிதை என்னது காதல் கள்வனுக்கு...
கவிதை எழுதும் நீங்கா காதல் கள்ளி
காதலித்த பிறகு தான் என்னை நான் ரசிக்க தொடங்கினேன்..!
நித்தமும் உன்னை சுவாசித்து நேசிக்குறேன்...
எனக்கே எனக்கானவன் என்னுள் இருப்பவன்...
எந்தன் இதயத்தை களவாடிய கள்வன் அவன்....
நீ தேடும் ஒவ்வொரு உறவாக நான் ஒருத்தியே இருக்கபேராசை படுவாள்
நீ தொலைவில் இருந்தாலும்
ஒவ்வொரு நொடியும் உன்னை நான் ரசிக்குறேன்...
நம் காதலின் அடையாளமாய்
உன்னை போல் ஒரு பெண் குழுந்தையும்
என்னை போல் ஒரு ஆண் குழந்தையும்
பெற ஆசை கொண்டேன்...
நம் குழந்தை பிறந்த தருணத்தில்
எல்லாரும் நம் குழந்தையை தான் முதலில் பார்ப்பார்கள்
நீ மட்டும் என் அருகில் வந்து தலை கொதி
முன்நெற்றியில் இதழ் பதித்தாய்
அந்த நொடி நான் இறந்தாலும்
 கவலை பட மாடேன்
உன்னில் என்றும் …..
நான்நீங்கா கள்வனின் காதலி
MR.Villan
« Last Edit: September 10, 2023, 03:49:57 pm by Maari »