Author Topic: ✨நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 10💫  (Read 1649 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 10💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile


வணக்கம் 🙏🙏🙏WTC அக்கா🫅 தங்கை🤷 எக்கோவ்🧖 சிஸ்🙎,


🥹🥹🥹 அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே..

💥தங்கை என்பவள் அவள் காண்பிக்கும் அன்பில் இன்னொரு தாய் ஆகிறாள்,


 👁️👁️கண்ணனா கண்ணுக்கு இமை போல
இமைக்கு குடை போல ...
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம். 🥺


🫅என் இதயத்தாளில்
நீ எப்போது எழுதினாய்
தங்கை” என்று

🤵உன் இதயப்புத்தகத்தில்
நான் எப்போது அச்சிட்டேன்
அண்ணா “ என்று

⛈️⛈️⛈️மின்னலாய் வந்தாய் -அன்பு
மழைப்பொழிந்தாய்
கானல் நீராய் போகிறாய் தங்கமே.

🌹🌹🌹மலர்களோடு மலராக பூத்திருக்கும் ரோஜா குணம் கொண்ட தங்க தங்கச்சியே.
. உன்னைக் காப்பதற்கு முள்ளாக நானிருப்பேன்..!

💕❤️💕💕💕❤️அண்ணன் எல்லாம் கறைந்து போனால் தங்கை எல்லாம் அழுது போவாள்.
😭🥺❤️❤️❤️தங்கை எல்லாம் அழுது போனால் அண்ணன் எல்லாம் இறந்தே போவோம்.😭😭😭😭🙏

💥💥💥தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்..!

By,

உங்கள் அனைவருக்கும் ன் மனமார்ந்த நன்றி!

❤️❤️❤️❤️❤️Urs Jackie🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶
« Last Edit: December 05, 2023, 02:14:24 pm by Maari »
♥️Murrattu kaalai♥️

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
ஆயிரம் பொற்காசுகள் குடுத்தாலும் வாங்க முடியாத உறவு அண்ணா தங்கை உறவு நம் முன்னோர் காலம் முதல் இக்காலம் வரை கம்பன் எழுதிய கம்ப இராமாயணத்தில் கூட நம்மில் சிலர் அறியாத பாசப்பிணைப்பு இராவணன் அவன் தங்கை மீது கொண்ட பாசத்திற்கு தன் உயிரையும் மாய்த்தான். மனிதர் இது நாம் சிலர் அறியாத உண்மை...

உலகையே உலா வரும் சந்திரன் ஓய்ந்தால் கூட என் தங்கை என்னை உலா வருவது என்றும் ஓயாது இறுதி வரை.......

என் தங்கையை என் தோழில் சுமந்து சென்ற போது அவளின் மழலை சிரிப்பின் முன் பட்டத்து யானயில் அமர்ந்து இருக்கும் இளவரசி கூட பொறாமை கொள்ளகிறாள் ..!

தங்கைமார் என்றும் தந்தையே தன் மகனாக பிறக்க வேண்டும் என்று எண்ணுவர் அனால் ஒவ்வொரு  அண்ணா மாறும் தன் தங்கையே மகளாக பிறந்து தன் மார்போடு கொஞ்ச வேண்டும் என்று ஆசை படுவார்கள்...தாரம் கூட அவளின் நாத்தனார் மீது சினம் கொள்ளகிறார்கள்......
தினம் தினம் அக்கோவம் என் தங்கை இடம் இருக்கும் செல்வம் அல்ல நான் என் தங்கை மீது கொண்ட அன்பின் விரிச்சமே.....
ஒரு பாடல் வரியில் ஒரு கவிஞன் மதுரை மீனாக்ஷி திருக்கோலம் தங்கை உன் கண்ணில் கண்டேன் என்று சித்தரிக்கின்றான் அக்கவிஞனுக்கு தெரியவில்லை என் தங்கையின் திருக்கோலத்தை கண்டு மதுரை மீனாக்ஷியே பொறாமை கொள்கிறாள் என்று என் தங்கையின் முத்து பற்களின் வெளிச்சத்தின் முன் மதுரை மீனாக்ஷியின் மூக்குத்தியின் ஒளி குறைந்து காணப்படுகிறது.

பால் பாயசம் குடுத்து என்னை பெற்று எடுத்த அன்னை நல்லா இருக்கா என்று கேக்கும் பொழுது இது என்ன பாயசம் என்று சொல்லும் அண்ணா தன் அவன் தங்கை தண்ணீரில் சக்கரையே கலந்துகுடுத்து பால் பாயசம் எப்படி இருக்கு என்று கேக்க பால் பாயசம் இது அல்லவே என்று சொல்லுவேன் என் அன்னை என் மீது கொள்ளும் கோவம் கூட அழகு தான்...

நம் முன்னோர் காலம் முதல் இக்காலம் வரை அண்ணா தங்கை உறவு அழிய கூடாது என்று மாமன் மகளுக்கு அத்தை மகன் என்று முடிச்சி போடும் கலாசாரம் நம் தமிழ் கலாச்சாரம் இக்கலாசாரத்தை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும்மாரறு என் ரத்தத்தின்  ரத்த உறவுகளை கேட்குறேன்..

இக்கவி சொற்களின் சித்தரித்த தங்கைகள் ஆதிரா தங்கம் ரோஜா ஸ்மைலிங் பிரின்சஸ் என் உயிரே காண்கிறேன்...

இப்படிக்கு அன்பு
அண்ணா….!
« Last Edit: December 04, 2023, 10:38:03 am by Maari »

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
நம்மை பெற்ற தாயின் வயிற்றிலிருந்து
வந்தால் தானோ சகோதரத்துவ
பாசம் பொங்கும் ?

எத்தனை நாட்கள் பாசம் வைக்க நேசம்
வைக்க ஒரு சகோதரன் இல்லை என்ற ஏக்கம்
சுழன்றுகொண்டிருந்தது என் மனதில்

ஏதோ ஓர் தாயின் வயிற்றில் பிறந்து
ஏதோ ஒரு நாட்டில் வளர்ந்து Wtc என்னும் அரட்டை அரங்கத்தில்
இணைந்து

பரஸ்பரம் பேசி பேசியதில் பேரை கூட பரிமாறிக் கொள்ளாமல் உள்ளுணர்வுடன் ஐக்கியமாகி அண்ணா என்று அழைக்கையில்

உச்சி முதல் பாதம்  வரை பாச உணர்வு பிரவாகம் எடுத்து ஓடிடுமெனில் நீயும் என்
சகோதரனே.. அப்படி கிடைத்த பொக்கிஷம் தான் என் அண்ணா மாரி

தினம் தினம் பேசிக்கொள்வதில்லை எங்கு இருக்கிறீர் என நான் அறியவில்லை
இருந்தும் உன்  நினைவுகள்
வந்து வந்து செல்லும்

என்றும் அண்ணண் என நினைக்கையில்
உனக்காய் ஓர் இடம் என்றும் என் மனதில்
உண்டு

என்றும் அன்புடன் உனது தங்கையாக

« Last Edit: December 04, 2023, 10:37:47 am by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
இந்த கவிதையை என் உடன் பிறவா அண்ணனுக்கு சமர்ப்பணம் அண்ணன் தங்கை உறவு என்றும் தனித்துவம் தூய்மையான உறவு என்றும் அழியாத மாறாத உறவு  என்று தான் சொல்லவேண்டும்...... அண்ணன் என்றும் தங்கையின் நண்பன் என்று தான் சொல்ல வேண்டும்...... அண்ணன் என்பவன் தந்தையின் மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும் தங்கையின் ஒரு துளி கண்ணீருக்கே அவன் உயிர் போகும் அளவு துடித்து விடுவான்.....நடை பழகுவது தந்தை என்றால் நடக்க வைப்பது அண்ணன் செல்லம் கொடுப்பது தந்தை என்றால் கண்டிப்பு காட்டுவது அண்ணன் அந்த கண்டிப்பிலும் ஒரு பாசம் இருக்கும் தந்தைக்கு மகள் என்றும் உயிர் என்றால் அண்ணன் அவனுக்கோ தேவைதை என்று தான் சொல்ல வேண்டும் அண்ணன் அவனின் மகளின் முகத்தை பார்க்கும் பொழுது கூட தன் தங்கையின் பால் முகம் தன் தெரியும்........தங்கை ஆனவள் தன் குழந்தைக்கு மாமன் என்றும் முன் உரிமை குடுத்து முதல் சக்கரை தண்ணீர் தர வேண்டும் என்று தவம் இருப்பாள் ஆயிரம் உறவு இருந்தாலும் தாய் மாமன் உறவு என்றுமே  தாயின் மாறு உறவு என்று தான் சொல்வார்கள்........ மறுபிறவு ஒன்று இருந்தால் உன் உடன் பிறந்த தங்கையாய் பிறக்க வேண்டும் இல்லையேல் உன் மடி தவழும் மகளாக பிறக்க வரம் வேண்டும் அண்ணா.....
இந்த கவிதையை என்னோடு உடன் பிறவா சகோதிரன் டெடி அண்ணாக்கு

Miss u Anna.......
BY
 

« Last Edit: December 04, 2023, 10:37:32 am by Maari »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
எப்போதும் சண்டை போட மட்டும் இல்லை நான் கலங்கும் போது எனக்காக முதலில் நிற்கும் உறவு நீ

என் குரலை கேட்டு என் சோகம் அறியும் என் பாதி நீ

வெளியில் சொல்ல முடியாத என் ரகசியம் காக்கும் ரகசிய இடம் நீ

எனக்கு பிடிக்காதது ஏதுவும் என்னை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என் அரன் நீ

என் தோலோடு தோள் கொடுத்து உன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது நல்ல நண்பன் நீ

தவறு செய்து விட்டு கெஞ்சும் போது என் குழந்தை நீ

என் சோகத்தை போக்க நீ முயலும் போது என் அத்தனை உறவும் நீ

என் ஆசையை சொல்லும் முன்னே நிறைவேற்றும் உன் புரிதல் 
என் மகிழ்ச்சிக்காக உன்னை தாழ்த்தி கொள்ளும் உன் அன்பு இன்னொரு அன்னை நீ

அப்பாவிடம் உன்னை மட்டி விட்டாலும் அதே அப்பாவிடம் எனக்காக சண்டை போடும் இன்னொரு தந்தை நீ

அண்ணா இப்படி உன்னை அழைத்தது இல்லை
இன்று உன்னை கூப்பிட நினைக்கிறேன்
அண்ணா அண்ணா அண்ணா

இன்று எனக்கு எல்லாமும் நீயாய் இருக்கிறாய்

நாளை என் திருமணத்திற்கு பிறகு உன்னை விட்டு தனியாய் போவேன் என்று நினைக்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் வரும் கண்ணிர்துளிகள் மட்டுமே சொல்லும் நன் உன்மேல் வைத்த பாசத்தை அண்ணா.......


ஒரே ஒரு வருத்தம் இந்த கவிதையை சொல்ல நம்ப WTC ல எனக்கு அண்ணா இல்லை😞🥺

« Last Edit: December 04, 2023, 10:36:56 am by Maari »
💓💖 ரம்யா 💖💓

Roja

  • Newbie
  • *
  • Posts: 4
  • Reactions: +0/-0
    • View Profile
வானத்தையும் சந்திரனையும் ஒன்றாகப் பார்ப்போம், உண்ணும் உணவைப் பகிர்ந்து கொள்வோம், போட்டியின்றி விளையாடுவோம், வெல்வோம், சாகும்வரை வாழ்வோம், நீங்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பீர்கள்.உரிமையாய் உறவாடும்-என்
உயிரின் உருவம் நீ
என் உடன் பிறவா- உன்னத உறவும் நீ
கள்ளம் இல்லா உள்ளம் தனில்
கற்கண்டாய் நான் கரைந்தேன்
அன்பு என்றால் என்னவென்று- என்
அண்ணனைக்கொண்டே நான் அறிந்தேன்!
தவறே ஏதும் நான் செய்தாலும்
தரமான போதனைகளால்-என்
தவறினையும் திருத்திடுவான்
உயரம் பல நான் செல்ல - உளமாற
என்னை வாழ்த்திடுவான்
எனக்கு ஊறு ஏதும் ஏற்பட்டால்
அவன் உள்ளத்தினுள் புழுங்கிடுவான்
மாறு கொண்டு நான் சிரித்தால்
மனதால் அவனும் மகிழ்ந்திடுவான்
உடன் பிறவா என் உடன் பிறப்பே!!
உன்னை ஒப்பித்து கவிதை சொல்லும்
என் வரிகளுக்கு வலிமை தர
உவமையினை தேடி நிற்கிறேன்
உன் உறவினில் மூழ்கித்திலைத்திட
என்ன பாக்கியம் நான் செய்தேனோ!?
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்- உன்
உடன் பிறப்பாய் -நான் பிறக்க வேண்டும்
இல்லையெனில் உன் மடி தவளும்
மகளாக நான் பிறக்க வேண்டும் அண்ணா!!
 உங்கள் அன்புச் சகோதரி
« Last Edit: December 04, 2023, 12:39:51 pm by Maari »

Senorita

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile

செல்லமாய் சீண்டி
சிரிப்பு கொடுத்தான்
நான்
மனம்வாடிய பொழுது…

தோழமையோடு
துணிவு கொடுத்தான்
நான்
துவண்டழும் பொழுது...

வல்லமையோடு
வலிமை கொடுத்தான்
நான்
வீழ்ந்தெழும் பொழுது...

அன்போடு
அரவணைத்தான்
நான்
மனம் மருகும் பொழுது...

நண்பனாய்
நல்வழி தந்தான்
நான்
பாதை தவறிய பொழுது...

தந்தையாய்
தைரியம்  தந்தான்
நான்
தோல்வியில் மருண்ட பொழுது...

அன்னையாக
ஆறுதல் தந்தான்
நான்
கண்ணீரில் கலங்கிய பொழுது...

சண்டைகள் பல
வந்தாலும்,
அன்பின் ஆழம்
என்றுமே குறைந்ததில்லை!!

தலைமகன் என்பவன்…
தந்தைக்கு தன்னில் பாதியானவன்
தாய்க்கு உயிரினும் மேலானவன்
உடன்பிறப்புக்கு உலகமானவன்
அப்பேர்பட்டவனை
எமனுக்கு வாரிகொடுத்த
துரதிஷ்டசாலி நான்...

தங்கம் நீ எவ்ளோ போல்டு இதுகெல்லாம் அசரலாமா...
உன்னால முடிலனா யாராலயும் முடியாது...
என் பாப்பா சொன்னா சரியாதான் இருக்கும்...

என் மேல் எனக்கே இல்லாத
நம்பிக்கை வைத்தாய் நீ
என்னை செதுக்கிய சிற்பி நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
நீயே உனக்கு என்றும் நிகரானவன்!!

இல்லாதவர்களை விட
இழந்தவர்களுக்கு தான்
அதன்
வலியும் அருமையும் புரியும்...
தொலைத்த பொருளும் தெரியும்
தொலைந்த இடமும் தெரியும்
ஆனால்
திருப்பி மீட்கத்தான் முடியவில்லை...
என் வரமாய் வந்த ஆண்தேவதை நீ
உன் முகம் காண தவிக்கிறேன்
மீண்டும் பிறந்து வருவாயா அண்ணா!!!
« Last Edit: December 04, 2023, 04:21:49 pm by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
தமக்கை என்ற சொல்லின் அர்த்தம் அறியாதவன்
சகோதரியின் அரவணைப்புக்கு ஏங்கியதுண்டு
என் ஏக்கத்தை போக்க
பங்கு என்று.....என் வாழ்வில் பங்கானவளுக்காக 


மரியாதை கொடுத்தது இல்லை..
மதிச்சும் நடந்ததில்லை..
மதிக்காத போதும்
என்னை மாற்ற அவள் நினைத்ததில்லை ..
அடிக்கு அடிதான்
உதைக்கு உதைதான்
இது தான் எங்களின் பாசம்..
அடித்தாலும் உதைத்தாலும்
என்னை யாரிடமும் விட்டு கொடுத்ததில்லை
ஒருவருடைய கண்களில் நீர் வடிந்தால்
இன்னொரு கண்களிலும் நீர் சிந்தினால்
அதை விட பெரிய உறவு உலகத்தில் இல்லை .....
உன் கண்களில் நீர் வடிந்தால்
உடையும் முதல் இதயம் எனதாகவே இருக்கும்
கருவறையை பங்கிட்டவனை இழந்தாய்
அவ்விடத்தை என்னால் நிரப்ப முடியுமா
என்று தெரியவில்லை
ஆனால் கல்லறை வரை என் வாழ்வை
உன்னிடம் பங்கிடுவேன்....
 .....என்றும் உன் பங்காக ......
இறுதி வரை என்றும்
 உன் சகோதரனாக.... உன் தோழனாக....இருப்பேன்
.....என் கண்கள் அயரும் வரை...


கண்டிப்பும் அரவணைப்பும் காட்டும் என் தாயின் உள்ளம் கொண்ட என் தமகைக்கு
Neeya neeya from M.kumaran இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்
« Last Edit: December 06, 2023, 12:43:59 pm by Sanjikun »