அன்று ஒரு காலை பொழுது
பர பர என்று கிளம்பி வகுப்பறைக்கு செல்ல
பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன்
அப்போது ஒரு இன்னிசை ஒலிக்க
என் மனதில் தூங்கி கொண்டு இருந்த
நினைவலைகள் தட்டி எழுந்தது
என் சந்தோஷம் ,துக்கம் ,காதல் ,
போன்று எல்லா உணர்வுகளையும் கொண்டது இந்த இசை
நான் உறங்காமல் விழித்து இருக்கும் நேரத்தில்
இசை என்னும் தன் மயில் பீலி விரல்களை கொண்டு
என்னை வருடி உறங்க வைக்கும்
கல்லும் கசிந்து விடும் அழகிய இசையை ரசிக்கத் தெரிந்தால்
தீயவன் திருந்துவான் இன்னிசையை கேட்டால்
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கெட்ட பாடலை
இசைத்து கனவு காண்கிறார்கள்
இரவுகள் நீடித்தால் இன்னிசை கேட்டு
கவிஞர்கள் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை
இசையும் காதலும் ஒரு உணர்ச்சி குவியல்கள்
காற்றில் இசை ...பேச்சில் இசை ...
எழுத்தில் இசை எல்லாவற்றிலுமே இசையை உணரலாம்
அதை ரசிக்க மனம் இருந்தால்
இசை இல்லமால் இவ்வுலகில் ஒருபோதும் ஜீவிக்க முடியாது !
என்றும் நான் இசையின் ரசிகை தான் .....!