Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐 Season 07 ✨  (Read 1630 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
✨SEASON 07✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!

Manmadhan

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +1/-0
    • View Profile
இப்படத்தினை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது என் சகோதியுடன் எனக்கு நடந்த ஊடலே 😔

தாய்க்கு பிறகு தாரம் என்று சொல்வார்
தமக்கயின் பாசதினை அறியாதோர்
ஒவ்வொரு சகோதரிக்கும் தன் சகோதரனே முதல் புதல்வனாய் திகழ்கிறான்
கற்பிப்பதில் குருவாகவும்
அன்பினில் அண்ணையாகவும்
தேற்றுவதில் தந்தையாகவும்
சிக்கல்களில் நண்பனாகவும் எப்போதும் என் உடன் இருக்கும் சகோதரியே
போர் காலத்தில் போர் வீரனை காகும் கேடயம் போல
இன்னல் பொழுதுகளில் என்னை நீ காத்து நிற்கிறாய்
நான் துவண்ட பொழுதுகளில் என் இன்னொரு தாயை போல அரவணைத்து கொண்டாய்
எப்போதும் போதித்து வழி நடத்தும் இன்னொரு தந்தையாக
மாமன் என்ற விட்டு கொடுக்க முடியாத உறவினை உன் மூலமாக எனக்கு தந்தாய்
என்னுடன் என் நண்பனை போல எபோதும் உடன் இருக்கிறாய்
இவளின் கோபம் மௌனம் ஆகும் பேச முடியாது 😔
இவளின் அன்பு சண்டை ஆகும் வெறுக்க முடியாது 🥰
இவளது அழுகை அமிலத்தினை போல தாங்க முடியாது 😂
பல முறை நான் என்னியதுண்டு என் பெற்றோரை ஏன் என்னிடம் இருந்து இந்த இறைவன் பிரித்தான் என்று 😔
இப்போதே புரிந்தது இத்துணை அன்பினை இவளிடம் இருந்து நான் பெறவே என்று 🥰
காலையில் எழுந்ததும் முதலில் தன் பிள்ளையை பார்க்கும் தாயை போல என்னை நீ என்றும் பார்க்கிறாய்
நான் இங்கு நண்பர்களுக்கு மண்மதனாகவும் தோழிகளுக்கு வல்லவனாகவும் இருக்கலாம்
ஆனால் எப்போதும் இருப்பேன் உங்கள் அன்பிற்காக எங்கும் உன் முதற் புதல்வனாய் ❤️
இப்பிறவியில் நான் இவளது சகோதரனாய் பிறந்திருக்கலாம்
இனி வரும் பிறவியிலாவது இவளது மகனாய் பிறந்திட ஏங்குகிரேன் 🥰❤️. 
                                                                                                                                                                இப்படிக்கு
                                                                           உங்கள் நான
                                                                 ( மன்மதன் / வல்லவன் )
                                                              நன்றி! நன்றி!!நன்றி!!!
                                       இதுக்கு மேல என்ன சொல்லறது தெரியல வர்றங்க

Idhoda oru song request irukku adhayum konjam potrunga
Aazhi soozhndha ulagile song from sivappu❤️ manjal💛 pachai💚
Dedicated to ivlo neram Mela irukkuradha ezhudhuna en akka butterfly 🦋 ku 😂😂😂
« Last Edit: October 21, 2023, 03:01:46 am by Maari »

Angel

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
  • 💙🤍EGWE🤍💙
    • View Profile
இந்த கவிதை என் அன்ப புரிஞ்சுக்காத ஒரு நபர்க்கு...

எண்ணவனுக்கு
அவன் மீது நான் கொண்ட காதலை புரிந்தது கொள்ளாத என்னவனுக்கு .....
என் நெஞ்சம் அவனை எண்ணி வாடி துவள்கிறது நீர் அற்ற ஓடை போல....

காத்து கொண்டு இருந்த என் அன்பை புரிந்து கொள்வாய் என்று நீ கொடுத்த வலிகளோ எல்லை கடந்த வானம் போல்  துன்பத்தில் மூழுகுகிறது தினம் தினம்... !

என் நினைவுகளில் மட்டும்  வாழ்ந்து கொண்டு இருந்தேன் உன் காதலோடு ... பாவம் என் இதயத்துக்கு தெரியாது என் காதலுக்கும் அன்பிற்கும்  தகுதி அற்றவன் அவன் என்று...

உன்னை பிரிந்தால் மட்டுமே புரியும் என் காதலின் அன்பும் ஆழமும் என் மனதில் கொண்ட உன் காதல் வலியும்...
பிரிந்து விட நினைத்தேன் அவன் நினைவுகளை மட்டும் சுமந்து செல்கின்றேன்....

என் இறுதி நொடிகள் காற்றில் கலந்தாலும்...
என் இருதயம் காதலை  கொடுக்க  உன் நெஞ்சத்தை மட்டுமே நாடும்...
உன்னிடம் இருந்து பிரிந்து மட்டும் தன் செல்கின்றேன்... ஆனால் உன்னை மறந்து அல்ல ....

என் நெஞ்சம் என்றும் சந்திரனை உலா வரும் சூரிய மலர் போல உன்னையே என் நெஞ்சம் உலா வரும்..!

இனி உன் விழிகள் மட்டும் உறங்கட்டும் ...
உன் மனது விழித்து கொண்டே இருக்கட்டும்... தேடாமல் கிடைத்த உறவு... நீ இன்று சென்றாயே என்று.......
« Last Edit: October 22, 2023, 12:14:48 pm by Aadhira »
The more you like yourself, the less you are like anyone else, which makes you unique. ...

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
அழுது கரைத்த மனத்தீவின்
பாதை மணலனைத்தும்
திட்டுகளாகிக் கீறிக்
கிழிக்கத் தொடங்கி விட்டது.
ஒவ்வொரு திட்டுகளின்
இடைவெளியிலும் ஓராயிரம்
தீப்பந்தங்கள் எரிகின்றன.

சுட்டெரிந்த தசை நார்களைக்
குருதியில் புரட்டி, நாவு வடியத்
திண்பதில் தான் உனக்கு
அத்துனை ஆனந்தம்..!!
நீ எப்போதுமே படர்ந்து
கிடந்த கனவுத் திடல்
பெரும்பள்ளமாகிப் போனது..!!

அன்பும், பரிவும், நேசங்களும்
நிறைவாகியிருந்தப் படலத்தில்
வெந்தனலையும்,
செங்குருதியயையும் நிறைத்த
கொடூரம் உன்னையேச் சாரும்.
உன்னிடமிருந்த அனைத்திற்கும்
கேடானவைகள் அனைத்தும்
என்னிடம் கொட்டப்பட்டு விட்டது.

என்னைக் காட்டிலும் உருகிக்
கருகித் துயிலாதுப் படியாதுக்
காதலிக்க இன்னொருவளை
எந்தத் தாயாலும் பிரசவித்து விட
முடியாது.

வான் ஒப்பாத என் ஒட்டு
மொத்தப் பேரன்பையும்
திணித்து வைத்த நீ தாங்காது
தாள வீழத் தயாராகியுள்ளாய்.

எனக்காய் நீயும், நீயாய்
நானுமே வாழ்ந்திடாமல்
அத்தனைத் தொகைக்
காதலையும் காகிதப்
பூவாய் கசக்கி எறிந்து
விட்டிருக்கிறாய். ஆனால்,
அடிமையான மனதேனோ
தன் ஆதியையேத் தேடித்
திரிந்து ஏமாந்து விடுகிறது.
« Last Edit: October 21, 2023, 03:00:01 am by Maari »

Mayuu

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
காலையில் எழுந்ததும் தேடுகிறேன்
அலைபேசியில்  குறுஞ்செய்தி
அனுப்பியிருப்பாய் என்று
அலைபேசியில்📱 அழைத்தாள் கூட
பதில் இல்லை
அந்த அலைபேசிக்கு கூட
தெரிந்திருக்கிறது நீ தொடர்பு எல்லைக்கு
அப்பால் சென்று விட்டாய் என்று
என் மனத்திற்குத்தான்
ஏனோ
இன்னும் அது விளங்கவில்லை
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும்
இன்பமாய் இருந்தது ஆனால்
அதை இப்பொழுது நினைக்கும் பொழுது
மனம் வலிக்கிறது
நீ என்னை விட்டுச் சென்றாலும்
உன் நினைவுகள் என்னை விட்டு
நீங்காமல் இன்னும் என்னை காயப்படுத்துகிறது
 ஆனால் அதையும்
இன்பமாக நினைக்கிறன்
நினைவுகள் மூலம் நீ என்னோடு இருக்கிறாய்
என்ற நிம்மதியோடு
இருந்தாலும்
 நீ இல்லாத ஒவ்வொரு நொடியும்
எனக்கு நரக வேதனையடா! 😔😔😔😔

 என்றும் அன்புடன்,
மயூ
« Last Edit: October 24, 2023, 07:25:24 am by Aadhira »

Vbe_

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
நிழல் உயிருக்கும் ஒரு இதயம் உண்டு...அவள் என்னை விட்டு செல்லும் அந்திமாலையில் இறையை தேடி சென்ற பறவை தான் கூட்டிற்கு வரவில்லையோ அது போல நானும் என்னுள் இதயமும் சுக்குனூறாய் உடைந்து போனது...அவள் என்னை உதறிவிட்டுச் செல்லும அந்த ஓர் நொடி என்னுள் இருக்கும்  நிழலும் செய்வதறியாமல் திகைத்து போனது நிழலும் வலியில் நானும் வழியில் .. அவள் எங்கும் செல்லவில்லை ஆனல் அவளின் மௌனம் என்னை ஏதோ புதியதாய் உணர்கிறேன் என்னிடம் ஆணைதிர்க்கும் சண்டை போடும் இதயம் எண்ணிடும் எதுவும்  பேசாமல் இருக்கும் நிழலின் உயிர்.
« Last Edit: October 24, 2023, 07:25:50 am by Aadhira »

Tiso20

  • Newbie
  • *
  • Posts: 11
  • Reactions: +0/-0
    • View Profile
இந்த கவிதை என் அவளுக்காக

உன்னை பிரிந்து இவ் வரிகள் எழுதுவேன் என்று என்றும் எண்ணி பார்த்தது இல்லை.....

நம் நந்தவனத்தில் பூக்கின்ற காதல் மலர் நம் வாழ்வின் விதியால் பறித்து போகும் என்று நான் நினைக்கவில்லை ....

இந்த பிரிவோ உன் உதடு இதழ்ழை முத்தமிட்டு சென்றது போல இன்பம் ஆக இருந்தல் எவ்ளோ மகிழ்ச்சியாக இருந்திருக்கும், ஆனால்

இந்த பிரிவினை குட உன் அணைப்பை விட்டு பிரிந்து சென்றது போல தான் கடினமானது, அதன் பின்பு என செய்வதென்று தெரியவில்லை.....

என் ஐந்து விரல்களும் உன் கூந்தலில் ஐந்து திசைகளில் நகர்வது போல, வாழ்க்கை குட அது போல் ஐந்து திசைகளிலும் செல்கிறது....

உன் கை விரல் பிடித்துக்கொண்டு  நந்தவனத்தில் நடந்தேன் 🥰 , உன் தோல் சாய்ந்து கதைகள் கதைத்தேன் 😍 ,
உன் அணைப்பினில் உன்னை சுவாசித்தேன் 🥰, நம் இதழ் சேர்ந்ததில் உன்னை உணர்ந்தேன்😍.

நம் நந்தவனத்தில் பூக்கின்ற காதல் மலர் 🌺, இந்த விதி வந்து பரித்ததும் 💔  நான் உன்னை பிரிந்தேன்.......💘

                        என் அன்பு  நந்தவனம் ❣️

TNanban

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
என்னவளே,!!!!!
என்னிடம் ஏதோ சொல்ல வந்தாய்,,,
ஏனொ தெரியவில்லை மெளனமாக திரும்பி
சென்றுவிட்டார்,,,,, பேச வார்த்தை இல்லை என்று எண்ணினேன்,,,,,பின்புதான் தெரிந்தது என்னிடம்
பேச உனக்கு வார்த்தையே இல்லை என்று,,,!!!!!!
காற்றில் கிழியும் இலைபோல என் இதயம் கிழிந்ததடி,,,
உன் பிரிவால்,,,💔
தாயின் கருவறையில் உள்ள நச்சுப்பை வெட்டுண்டதும்
கருவறை உள்ளேயே இறக்கும்,,
குழந்தை போல் நானும் இறந்தேபோனேன்,,
உன் இதய கருவறையுள்ளே ,,,,
உன் செவ்விதழில் இருந்து வந்த வார்த்தைகள்,,,
நாம் பறிமாறிக்கொண்ட பல முத்தங்கள்,,,,,,,
சில நேர ஊடல்கள்,,,,,, திகட்டாத கூடல்கள்,,,,,,,,
இவை அனைத்தும் கானல் நீரானதே உன் பிரிவினால்,,,
என்னவளே,,,,,,,
பிரிந்து சென்ற நீ மீண்டும் வந்து விடாதே,,,,,
அது உனக்கு பெருத்த ஏமாற்றமாக அமையும்,,,,,,,,
உடலை விட்டு பிரிந்த உயிர் மீண்டும் இணையாது,,,,,,,,
நான் சில காலம் வாழ ஆசை படுகின்றனர்,,,,
உன் நினைவுகளுடன்,,,,,,, ஒரு நாள் உன் நினைவு என்னை விட்டு நீங்கும்,,, அன்று என் நினைவு உன்னுள் என்னை நினைவுகூரும் என்று நம்புகின்றேன்,,,,,,,,என்னவளே,,,,,,,,,,,,,

நன்றி,,,,
உங்கள் நண்பன்,,
ர,ரவி ( TNanban)
« Last Edit: October 21, 2023, 10:38:32 am by TNanban »

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
                 "விட்டுப்பிரிந்தாய்"
                      "விட்டுச்சென்றாய்"

    வான்வெளியை விட்டு மண்ணே நழுவி கீழே
விழுந்ததேன்.....
         விட்டுப்பிரிந்தாய்!

    மரமாய் என்னில் சிறு சிறு இலையாய் சேர்ந்தாய்!
    காலம் மாற சிறு சுவடுகளே தெரியாமல் விட்டுப்போனாய்!


    பசிக்கு மண்ணை
அள்ளி தின்றேன்!
உன்னை பார்க்கும் முன்பு...
    உன் பாதம் தொட்ட
மண்ணை அள்ளி தின்றேன்!
உன்னை கண்ட பின்பு...
          விட்டுச்சென்றாய்!!

   சொட்ட சொட்ட குடைக்குள் மழையில்  நனைந்தேன் நனைந்தேன்!
   கண்ணீர் கலந்து  கடல் நீர் மட்டமாக தரை தொட்டு விட்டுப்போனாய்!

     கருமேகமாக இணையக் கண்டேன்!
     வெள்ளை மேகமாய் விட்டுச்சென்றாய்!

    உன் வெலுச்சம் தேடியே நிலவே!
    இரவை தொலைத்து பகலில் சூரியனாய் வந்தேன் விட்டுச்சென்றாய்!!

    நான் பார்க்கும் திசை
எல்லாம் நீ  பதித்த நினைவுகள் தோன்றுதே!
    கண்கள் சேர்க்கும்
கண்ணிர் எல்லாம் நான் நினைக்க
காலம் ஓடுதே!

             "விட்டு பிரிந்தாயே"

      இப்படிக்கு
            அன்றும்💖
               இன்றும்❤️
                    என்றும்💖
                                😎 "BLACKED"😎
          Disclaimer
🚫இந்த கவிதையில் வரும் இயற்கை கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே யாரையும் தொடர்பு கொள்ளும் வார்த்தைகளும் இல்லை...🚫