Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐 💥SEASON 13💫  (Read 1530 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 13💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
சொன்னால் தான் காதலா சொல்லேண்டா வடிவேலா….
அனைவர் வாழ்விலும் மறக்க முடியா மறுக்க முடியாத
காதல் ஒன்று உள்ளத்தில் இருக்கும்- எனக்கும் இருக்கு
படிக்கும் பருவத்தில் வந்த காதலை எல்லாம் படிப்பிற்காக
ஒத்தி வைத்து ஒரு தலை காதலன் ஆனேன்….
பத்தாவது படிக்கும் போது உமா மேல் ஒரு தலை காதல் கொண்டேன்…
கல்லூரியில் நிவி மீது காதல் கொண்டேன்
வேளையில் சேர்ந்த நாள் முதல் என் வருங்கால மனைவி மீது காதல் கொண்டேன்…
நான் கொண்ட காதல் யாவும் ஒரு தலை ராகமே….
சொல்லி கிடைக்கும் காதலின் அனுபவம் யான் அறியேன்….
சொல்லாமல் கிடைத்த ஒரு தலை காதலின் அனுபவமோ யான் அறிவேன்
அவளிடம் திருடாதது அவள் இதயத்தை மட்டுமே….
அவளுக்கு தெரியாம அவளை பார்ப்பேன்…என்னை பார்க்கும் போது எங்கோ பார்ப்பேன்..
அவள் சிரிப்பினை ரசிப்பேன்…. அவள் சிரிக்கும் போது அவள் முகம் முழு பௌர்ணமி ஆக ஜொலிக்கும்
அவள் அழுதாள் ஆறுதல் சொல்ல துடிக்கும் நெஞ்சம்…அடித்து விடுவாள்
என்று அஞ்சியது கொஞ்சம்
எங்களிடம் கொஞ்சல்கள் குறைவு….நினைவுகள் அதிகம்
உமாவின் நிலை யான் அறியேன்…அவளின் நினைவுகள் மறவேன்
நிவிக்கோ அழகான குடும்பம் அவளை போல ஒரு குட்டி தேவதை…
என் தேவதை தேடி வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்…
கைக்கொற்கும் நாளுக்காக காத்து இருக்கிறேன் எனை தினந்தோறும் அன்பால் கொள்ள போகும் அழகான ராட்சசியே….

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன்
சச்சின் VJ









Thendral

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
காதல் என்பது அழகு என்றால், ஒரு தலை காதல் இன்னும் அழகு அதிலும் பெண்களின் ஒரு தலை காதல் பேரழகு..
இரு இதயங்களுக்கான ஒரு உணர்வு காதல் என்றால்  இரு இதயங்களுக்கும் சேர்த்து ஓர்  உணர்வு என்பது ஒரு தலை காதல்,
ஒரு பெண்ணின் ஒரு தலை காதலை பற்றி ஒரு கற்பனையான  கவிதை,

அவளுக்கு அவன் மட்டும் தான் பேரழகன், அவனிடம் அப்படி என்ன தான் உள்ளது என்று அனைவரின் கேள்விக்கும், புன்னகையை மட்டும் பதிலாக  அளிப்பவள்,
அவனின் ஒரு நொடி கடைக்கண் பார்வைக்காக நாள் முழுவதும் காத்திருப்பவள், அவனிடம் பேச கட்டுரைகளை தயார் செய்து வைத்தாலும் அவன் முன்பு மௌனத்தை மட்டும் வெளிப்படுத்துபவள்.
அவனிடம்  இருந்து  வரும் ஒரு குறுஞ்செய்தியை பார்த்து ஓர் காதல்  நாடகத்திற்கே ஒத்திகை பார்த்தவள்., அவளின் அத்துமீறும் ஆசைகளுக்கு விதிமுறைகள் இருக்கிறதா என்ன??அவள் அவனை  பார்க்கும் போதிலும் சரி, அவன்  அவளை  பார்க்கும் போதிலும் சரி அவள்  இதயத்தை நொறுக்கி விடுகிறது அவன்  காந்த பார்வை, இருந்தும் அவனையே  தேடும் அவள் விழிகளை  என்னவென்று சொல்வது, இது முட்டாள் தனம் என்று புத்திக்கு உரைத்தாலும் அவள் மனது எங்கே கேட்கிறது, அந்த முட்டாள் கூட்டத்தில் நானும் ஒருத்தியாய் இருந்து விட்டு போகிறேன் என்று கூறுகிறாள்.கை கூடாது என்று அறிந்தும், கை கோர்க்க துடிக்கும் அவள்  மனதிற்கு  எப்படி சொல்லி விளங்க வைப்பேன், கானல் நீரில் மீன் பிடிக்க இயலாது என்று..
அவனோடு சேர்ந்து வாழ முடியாதெனினும் அவன் நினைவுகளை நிஜமாக்கி கனவுகளில் வாழ்ந்து  கொண்டு தான் இருக்கிறாள் அவள்...

ஒருதலை காதல்
தறுதலை காதல் தனம் என்று கூறினாலும்,

சொல்லாத காதல்
பேசாத வார்த்தைகள்
அனுப்பாத கவிதைகள்
வெளிப்படுத்தாத உணர்வுகள்
கொண்டாடாத காதலர் தினம்,
என்று இப்படி நிகழாதவைகளாக இருந்தாலும் கூட, அவன் மீதான காதல் மட்டும் என்றும் அவளுக்கு குறையாது,

ஒரு தலை காதல் என்பது ஒரு சுகமான  இம்சையே..!! ❤️❤️

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
என் அன்பே உன்னை தேடி அலையும் கண்கள்

உன் இதழ் அசைவில் வரும் அந்த இசையை கேக்க விரும்பும் செவிகள்

அந்த ஒரு வார்த்தையில் பூக்கும் இதயம்

ஏதோ வாங்குவது போல் உன்னை தொடும் பொழுது ஏற்படும் மாற்றம்

உன் சிறிய புன்னகை என்னை உருக்கும் அன்பே

என்னிடம் கோவம் கொள்ளும் போது ஏற்படும் வலி

நீ எனக்கு கொடுத்த பென்சில் கூட ஒரு பொக்கிஷம்

உன் முகத்தை பார்த்து நான் பேச நினைக்கும் போது வரும் வெட்கம்

சிரிக்கும் உன்னை பார்க்கும் போது தோன்றும் ஆனந்தம்

என் வாழ்வில் ஆனந்தமே உன்னுடன் பேசி கொண்டு நடக்கும் அந்த 10 நிமிடம் தான்

உன் அன்புக்கு முழுவதும் நான் மட்டும் அடைய ஆசையே ஆனால் நடக்குமா அது,,,

இவை அனைத்தும் என் வாழ்நாள் முழுவதும் அடைய ஆசை தான் அன்பே
ஆனால் நன் உன் மேல் கொண்டது என்னவோ ஒரு தலை காதல் அல்லவா ...

ஏதை வேண்டுமானால் ஏற்றுகொள்வேன் ஆனால் உன் கண்ணிரை மட்டும் என் இதயம் தாங்காது
அதை மாற்ற என் உயிரை கூட மாய்த்துக்கொள்வேன் அன்பே

இதில் கூட இவ்வளவு சுகமா உன் மகிழ்ச்சிக்காக என் காதலை கூட மறைக்க துணிந்தேன் அன்பே
காரணம் உன்மேல் கொண்ட காதல் இல்லை ஒரு தலை காதல்.....

இப்படிக்கு,
❤️ Ramya ❤️
« Last Edit: February 08, 2024, 10:26:57 am by Ramya »
💓💖 ரம்யா 💖💓

Suriya

  • Newbie
  • *
  • Posts: 2
  • Reactions: +1/-0
    • View Profile
கிடைக்காது என்று தெரிந்தும் கூட
உன்னை பார்க்கையில் மனம் நினைப்பது கிடைத்துவிடாதா என்று

நாள் முழுவதும் காத்திருக்கிறேன்
நான் உன்னை பார்க்கும் அந்த ஒரு நிமிடத்திற்காக

அவளுக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன்
ஆனால் அவள் எனக்காக இழந்தது என்னை மட்டும் தான்

நீ கிடைக்கவில்லை என்பதற்காக நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை..ஏனெனில் நான் செத்தால் எனக்குள் இருக்கும் நீயும் இறந்துவிடுவாயே என்று அஞ்சுகிறேனடி..

உன் பார்வையில் தொலைந்தது நான் மட்டுமல்ல
என் கோபங்களும் தான்

தூரத்தில் நீ இருந்தாலும் என் பார்வை உன்னைத்
துரதிக் கொண்டே தான்இருக்கும்
என் இதயத்தின் துடிப்பு நிற்கும் வரை

காதலித்தேன் என்பதற்கு காலங்கள் ஒரு பொருட்டல்ல..
ஒரு நொடியே போதும்..உன் நினைவுகளுடன் நான்..
« Last Edit: February 12, 2024, 12:29:22 pm by Suriya »

Charlotte

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +2/-0
    • View Profile
ஒரு ஹய் ஹலோ இதனோடு முடிகிறது அவனுடனான எனது உரையாடல்..
நாட்கள் செல்ல செல்ல ஏதோ ஒர் ஈர்ப்பு அவன் மீது..

அவனை காணும் போதெல்லாம்
என் மனம் துள்ளி குதிக்கின்றது ஒரு சிறு குழந்தையை போல..
அவனை காணும் ஆசையில்
அவன் வரும் அதே நேரத்தில் நானும் அங்கே அவனுக்காக தவம் கிடக்க ஆரம்பித்தேன்..

இருந்தும் ஒரு ஹலோ தாண்டி பேச தைரியம் இல்லாத பாவையாய் நான்.. ஆனால் அவனோடு ஒரு நாள் ஆவது பேசிவிட வேண்டும்..
அதற்கான சூழ்நிலை அமையும் என்ற நிம்பிக்கையில் நான்..

யாரும் இல்லா நேரம்..
அவனும் நானும் பேசிக் கொள்ளாமல் சற்று தொலைவில்..
அந்த நேரம் ஒரு குடிமகன் என்னை நெறுங்க சற்றே சுதாகரித்து கொண்டு ஓடி சென்றேன் அவனிடம்.. அவன் பாதுகாப்பானவன் என்று உணர்ந்த பாவயாய் நான்..
என் நிலைமை தெரிந்து அன்று என்னை பாதுகாத்த கடவுளாய் அவன்..

அதற்கு பின் நாட்கள் நகர்ந்தது..
நாங்களும் தான்..
அவனுக்கும் என்மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன்..

ஒருவித இனம் புரியா பாசம் இருவருக்கும்..
தொடர்ந்து பேச ஆரம்பிட்டோம்..
சிரிதோம்..
சிந்தித்தோம்..
காத்திருந்தோம்..
அன்பை பரிமாரிக்கொண்டோம்..

நாட்கள் நகர்ந்தது..
அவனுக்கு என்மீதான அன்பு அதிகரிக்க என்னை தனக்கு மட்டுமே சொந்தமாக்க அவன் நினைப்பதை உணர்ந்தேன்..

ஒரு தோழர்,தோழிகளிடம் கூட பேச முடியாமல் தவித்தேன்..
தாங்க முடியா துயரில் நான்.. அவனிடம் இதை சற்றும் எதிர்ப்பாராத பாவையாய் நான்..

அங்கே இது ஒரு காதலாக தோன்றவில்லை எனக்கு..
ஒருவித சுயநலமாக உணர்ந்தேன்..

அன்று சூழ்நிலை கைதியாய் நான்.. அவனிடம் எனக்கு தோன்றியது காதலா என்றால்?
இல்லை என்று என் மனம் கூறியது..

அவனோடு பேசவேண்டும்..
பழக வேண்டும்..
சிரிக்க வேண்டும்..
என்று ஆசைப்பட்டேன்..
இது காதலாக மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன?

ஆனால் அவன் இன்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக அட்கொள்வதை உணர்ந்தேன்..
பின்பு புரிந்து கொண்டேன் அவன் என்னிடம் மட்டும் அல்ல..
மற்றொரு பெண்ணிடமும் இதே பரஸ்பர அன்பை பரிமாரி கொண்டு இருந்தான் ஒரே நேரத்தில் என்று..

உடைந்து போனேன் நான்..
காதல் இல்லை என்றாலும் ஏதோ ஒரு வலியை உணர்ந்தேன் அன்று..

அதற்கு பெயர் என்ன? கேள்விக்குறியாய் நான்?
அவனிடம் கோபப்பட கூட முடியாத பாவையாய் நான்..

அவனை விலகினேன் எதுவும் கூறாமல்..
குழம்பி போனான் அவன்..
நானே வருவேன் என்ற நம்பிக்கையில்..
அவன் தந்த வலி இனி போதும் வேண்டாம் என்று பரிதவிக்கும் பாவியாய் நான்..

நாட்கள் உருண்டோடின மறுபடி அன்னியர்களானோம்

அதே ஹாய் ஹலோ உடன் முடிவடைகிறது எங்களின் உறையாடல் மீண்டும்..

இருந்தும் இன்னும் அவனை காணும்போதெல்லாம் எனக்கு முன் இருந்த
அதே ஈர்ப்பு..
அதே உணர்வு..
அதே சிறு குழந்தை போல் துள்ளும் உள்ளம் மாறவில்லை..

ஆனால் அனைத்தும் தூரத்தில் இருந்து ரசித்துக்கெள்ள மட்டுமே என் மனம் செல்கிறது..

ரசிக்கிறேன்..

காலத்திற்கும் அழியாத அவனின் நினைவுகளோடு..

- Naan Charlotte
« Last Edit: February 08, 2024, 07:04:02 am by Charlotte »

WTC SilK

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
கண்டவுடன் காதல் என்று சொல்லக்கேட்ட நான்...
 கண் இமைக்கும் நொடியில் காதலால் இழுக்கப்பட்டேன்.. இன்னும் அவளைப் பார்த்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை ..
ஆனால் அவளுடன் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நினைப்பு!!! அவள் பெயர் தேன்மொழியாகத் தான் இருக்க வேண்டும்...! ஏனென்றால் அவள் பேசும் வார்த்தைகள் தேனாக ஒலிக்கின்றது ...
என் இதயத்தில் தேன் ஒழுக ஒழுக என் வார்த்தைகளில் வருகின்றாள் கவிதையாய்!!!!
 காதல் என்றால் நான்கு கண்கள் பார்த்து இரு இதயம் லயத்து அதில் உருவாகும் மௌனம் வார்த்தைகளாய் வெடிப்பது தான் காதல் என்பார்கள்.... எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை இரு கண்கள் பார்த்து ஓர் இதயம் பேசி அவள் நினைவினை நினைத்து நினைத்து வரும் நினைவுகள் தான் காதல் என்று!!!!
 சில பேர் சொல்லுவார்கள் இது ஒரு தலை காதல் என்று..
 பல பேர் சொல்வார்கள் இது பைத்தியக்கார காதல் என்று ...
எவருக்குத் தெரியும் இதுதான் என் புனிதமான காதல் என்று !!!!
அப்பொழுது சொன்னேன் என் இதயம் தேன் ஒழுக ஒழுக வரும் வார்த்தை என்று என் காதலை.... இப்பொழுது சொல்கின்றேன் இதயம் கனத்து உதிரம் சொட்ட சொட்ட கண்களில் கண்ணீராய் வருகிறாள் என் காதலாய்!!!!
 என்னிடம் இருக்கும் பென்சிலின் கார்பன் குச்சிகள் தீர்ந்தன என்னவளின் முகத்தினை தீட்ட நினைத்து....
 இமயம் கூட சுமை இல்லையடி உன் இதயத்தை நான் சுமக்கும் பொழுது!!! பெண்ணே நான் யார் என்று கூட தெரியாத உன்னிடம் நான் என்ன சொல்வேன்...
 என் வாழ்க்கையே நீ என்று வாழ்ந்து வரும் என் காதலை!!!!
 என்னுள் என்றும் காதலாய் நீயே!!!

LOVELY QUEEN

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 14
  • Reactions: +4/-0
    • View Profile
உயிரானவனே,

  விழிகள் மூடினால் கனவாகிறாய்
விழிகள் திறந்தால்
நினைவாகிறாய்
உயிர் வாழும் வரை
உன்னவளாகவே..
உன் நினைவுகளுடனே..

இமைகள் மூடி விழித்துக் கிடக்கிறேன்
விழித்திரையின் விளிம்பில் உன் நிழற்படம்..
கனவாக இருந்திருந்தால்
கலைந்து போய் இருப்பாய்..
காதலாக அல்லவா கலந்து கிடக்கிறாய்..
காத்திருக்கிறேன் அன்பே..
காலமெல்லாம்
உன் காதலில் கரைந்திட..

கடற்கரை மணலாய்
உன்னைத் தொடர  நான் நினைக்க,
கடல் அலையாய்
என்னை தொட்டு விலகுகிறது
உன் நினைவுகள்..

உன் நினைவுத் தீண்டலில்
காற்றும் கூட தோற்றுப் போகிறது

பேச வந்த வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில் மயங்கி

தொலைந்து போகிறேன் நானும்
தொலைவில் நீ சென்றாலே

கை தொடும் தூரத்தில்
நீ இருந்தும்
கண் கொண்டு மட்டுமே
உன் வழி தொடர்கிறேன்

சென்று சேரும் முகவரிகள்
அறிந்த பின்னும்
சேர வழியின்றி
தவித்து நிற்பது
என் செய்திகள் மட்டுமல்ல
உனக்கான நானும்...

மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ...
..




[/b][/color][/size]

Ashwin_

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
    • View Profile
மயங்கினேன் உன் வார்த்தையில் காதலிக்கவில்லை ! இன்பம்   கொடுத்தாய்   என் தமிழால்
செவிகள் இனிக்கும்படி ! மனதை திருட எத்தனித்தாய்   நீ லவ் திருடன் என்று உரைத்து கொண்டே !                        களவு போக துணை வந்தாள் என்னவள் தொலைத்தேன் என் ஹிருதயத்தை !                    என் ஏக்கம் தெரிந்து என்னை
வீழ்த்தினாய் உன் வார்த்தையால்.                 களவு பேச்சுக்கள் கால நேரம்
கடந்து நம்மை கலந்துரையாட தூண்ட ! பேசிய வார்த்தையில் எல்லாம் தமிழ் ததும்ப காதல் கசிந்துருகி உன்னை விட உன் தமிழை அதிகம் நேசித்தேன் !                தமிழாய் என்னுள் நுழைந்து குருதியில்  கலந்து இன்று தமிழில் வார்த்தைகள் தீர்ந்து போனதாய் என்னை உணரவும் செய்துவிட்டாய் உன் மௌனத்தால் !     இன்று உன்னிடம் தூது செல்ல என் தமிழை தவிர என்னவள் கூட இல்லை என்னிடம் !                 உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் ! ஆனால் அங்கு தான் உணர்ந்தேன் நான் என்னை ரசிக்கவில்லை உன் வார்த்தைகளை தான் ரசிக்கிறேன் என்று உன் காதல் கடலில் கலந்து மூழ்கி உன்னுள் இணைந்து விட்டேன் உன்னில் இருந்து என்னை பிரித்து செல்ல யாராலும் இயலாது ஆழி பேரலையாக அடித்து செல்லும் உன் காதல் என்னுள்.. உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் ஆனால் அங்கு தான் உணர்ந்தேன் நான் என்னை ரசிக்கவில்லை உன் வார்த்தைகளை தான் ரசிக்கிறேன் என்று உன் காதல் கடலில் கலந்து மூழ்கி உன்னுள் இணைந்து விட்டேன் உன்னில் இருந்து என்னை பிரித்து செல்ல யாராலும் இயலாது ஆழி பேரலையாக அடித்து செல்லும் உன் காதல் என்னுள்